Skip to main content

وَهَلْ أَتَىٰكَ
உம்மிடம் வந்ததா?
نَبَؤُا۟
செய்தி
ٱلْخَصْمِ
வழக்காளிகளுடைய
إِذْ تَسَوَّرُوا۟
அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
ٱلْمِحْرَابَ
வீட்டின் முன்பக்கமாக

Wa hal ataaka naba'ul khasm; iz tasawwarul mihraab

(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றதா? அவர்கள் (அவர் வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத் தாண்டி, (வந்து)

Tafseer

إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
عَلَىٰ دَاوُۥدَ
தாவூத் (நபி) இடம்
فَفَزِعَ
அவர் திடுக்கிற்றார்
مِنْهُمْۖ
அவர்களைப் பார்த்து
قَالُوا۟
அவர்கள் கூறினர்
لَا تَخَفْۖ
பயப்படாதீர்
خَصْمَانِ
நாங்கள் இரு வழக்காளிகள்
بَغَىٰ
அநியாயம் செய்தார்
بَعْضُنَا
எங்களில் ஒருவர்
عَلَىٰ بَعْضٍ
ஒருவர் மீது
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியில்
بِٱلْحَقِّ
நீதமாக
وَلَا تُشْطِطْ
அநீதி இழைத்து விடாதீர்
وَٱهْدِنَآ
எங்களுக்கு வழிகாட்டுவீராக!
إِلَىٰ سَوَآءِ
பாதையின் பக்கம்
ٱلصِّرَٰطِ
நேரான

Iz dakhaloo 'alaa Daawooda fafazi'a minhum qaaloo la takhaf khasmaani baghaa ba'dunaa 'alaa ba'din fahkum bainanaaa bilhaqqi wa laa tushtit wahdinaaa ilaa Sawaaa'is Siraat

தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் "(தாவூதே!) நீங்கள் பயப்படாதீர்கள். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கின்றார். எங்களுக்கிடையில் நீங்கள் நீதமாகத் தீர்ப்பளியுங்கள்.அதில் தவறிழைத்து விடாதீர்கள். எங்களை நேரான வழியில் செலுத்துங்கள்.

Tafseer

إِنَّ
“நிச்சயமாக
هَٰذَآ
இவர்
أَخِى
எனது சகோதரர்
لَهُۥ
அவருக்கு
تِسْعٌ وَتِسْعُونَ
தொண்ணூற்றி ஒன்பது
نَعْجَةً
ஆடு(கள்)
وَلِىَ
எனக்கு உள்ளது
نَعْجَةٌ
ஆடுதான்
وَٰحِدَةٌ
ஒரே ஓர்
فَقَالَ
அவர் கூறுகிறார்
أَكْفِلْنِيهَا
அதை(யும்) எனக்கு தருவாயாக!
وَعَزَّنِى
என்னை மிகைத்துவிட்டார்
فِى ٱلْخِطَابِ
வாதத்தில்

Inna haazaaa akhee lahoo tis'unw wa tis'oona na'jatanw wa liya na'jatunw waahidah; faqaala akfilneeha wa 'azzanee filkhitaab

இவர் என்னுடைய சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கின்றது. (அவ்வாறிருந்தும்) அவர் அதனையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறித் தர்க்க வாதத்தில் அவர் என்னை ஜெயித்துக் கொண்டார்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
لَقَدْ ظَلَمَكَ
அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார்
بِسُؤَالِ
(அவர்) கேட்டதினால்
نَعْجَتِكَ
உனது ஆட்டை
إِلَىٰ نِعَاجِهِۦۖ
தனது ஆடுகளுடன் சேர்க்க
وَإِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானவர்கள்
مِّنَ ٱلْخُلَطَآءِ
பங்காளிகளில்
لَيَبْغِى
அநீதிஇழைக்கின்றனர்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
عَلَىٰ بَعْضٍ
சிலர் மீது
إِلَّا
தவிர
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
وَقَلِيلٌ مَّا
மிகக் குறைவானவர்களே!
هُمْۗ
அவர்கள்
وَظَنَّ
அறிந்தார்
دَاوُۥدُ
தாவூத்
أَنَّمَا فَتَنَّٰهُ
நாம் அவரை சோதித்தோம் என்பதை
فَٱسْتَغْفَرَ
ஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார்
رَبَّهُۥ
தன் இறைவனிடம்
وَخَرَّ
இன்னும் விழுந்தார்
رَاكِعًا
சிரம் பணிந்தவராக
وَأَنَابَ۩
இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்

Qaala laqad zalamaka bisu 'aali na'jatika ilaa ni'aajihee wa inna kaseeram minal khulataaa'i la-yabghee ba'duhum 'alaa ba'din illal lazeena aamanoo wa 'amilus saalihaati wa qaleehum maa hum; wa zanna Daawoodu annamaa fatannaahu fastaghrara Rabbahoo wa kharra raaki'anw wa anaab

அதற்கு தாவூத், "உன்னுடைய ஆட்டை, அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உங்கள் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும் பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!" என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

Tafseer

فَغَفَرْنَا
மன்னித்தருளினோம்
لَهُۥ
அவருக்கு
ذَٰلِكَۖ
அதை
وَإِنَّ لَهُۥ
நிச்சயமாக அவருக்கு
عِندَنَا
நம்மிடம்
لَزُلْفَىٰ
மிக நெருக்கமும்
وَحُسْنَ
அழகிய
مَـَٔابٍ
மீளுமிடமும் உண்டு

Faghafarnaa lahoo zaalik; wa inna lahoo 'indanaa lazulfaa wa husna ma aab

ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.

Tafseer

يَٰدَاوُۥدُ
தாவூதே!
إِنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَٰكَ
உம்மை ஆக்கினோம்
خَلِيفَةً
அதிபராக
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
بَيْنَ
மத்தியில்
ٱلنَّاسِ
மக்களுக்கு
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
وَلَا تَتَّبِعِ
பின்பற்றிவிடாதீர்
ٱلْهَوَىٰ
ஆசையை
فَيُضِلَّكَ
அது உம்மை வழிகெடுத்து விடும்
عَن سَبِيلِ
மார்க்கத்தில் இருந்து
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ يَضِلُّونَ
வழிகெடுபவர்கள்
عَن سَبِيلِ
மார்க்கத்தில் இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
شَدِيدٌۢ
கடுமையான(து)
بِمَا نَسُوا۟
அவர்கள் மறந்ததால்
يَوْمَ
நாளை
ٱلْحِسَابِ
விசாரணை

Yaa Daawoodu innaa ja'alnaaka khaleefatan fil ardi fahkum bainan naasi bilhaqqi wa laa tattabi'il hawaa fayudillaka 'an sabeelil laah; innal lazeena yadilloona 'an sabeelil laah; lahum 'azaabun shadeedum bimaa nasoo Yawmal Hisaab

ஆதலால், (நாம் அவரை நோக்கி) "தாவூதே! நிச்சயமாக நாம் உங்களைப் பூமியில் (நம்முடைய) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீங்கள் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுங்கள். சரீர இச்சையைப் பின்பற்றாதீர்கள். பின்பற்றினால், அது உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறிவிடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறு கின்றார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு" என்று கூறினோம்.

Tafseer

وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
ٱلسَّمَآءَ
வானத்தையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும்
بَٰطِلًاۚ ذَٰلِكَ
அது/வீணாக
ظَنُّ
எண்ணமாகும்
ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
நிராகரிப்பவர்களின்
فَوَيْلٌ
நாசம்
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்களுக்கு
مِنَ ٱلنَّارِ
நரகத்தில்

Wa ma khalaqnas samaaa'a wal arda wa maa bainahumaa baatilaa; zaalika zannul lazeena kafaroo; fawi lul lillazeena kafaroo minan Naar

வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமேயாகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.

Tafseer

أَمْ نَجْعَلُ
ஆக்குவோமா?
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
كَٱلْمُفْسِدِينَ
குழப்பம் செய்பவர்களைப் போன்று
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَمْ نَجْعَلُ
ஆக்குவோமா?
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
كَٱلْفُجَّارِ
பாவிகளைப் போன்று

Am naj'alul lazeena aamanoo wa 'amilus saalihaati kalmufisdeena fil ardi am naj'alul muttaqeena kalfujjaar

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைப் பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கி விடுவோமா? அல்லது இறை அச்சமுடையவர்களை (பயமற்று குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?

Tafseer

كِتَٰبٌ
ஒரு வேதமாகும்
أَنزَلْنَٰهُ
இதை நாம் இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
مُبَٰرَكٌ
அருள் நிறைந்த(து)
لِّيَدَّبَّرُوٓا۟
அவர்கள் சிந்திப்பதற்காக(வும்)
ءَايَٰتِهِۦ
இதன் வசனங்களை
وَلِيَتَذَكَّرَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்கள்

Kitaabun anzalnaahu ilaika mubaarakul liyaddabbarooo Aayaatihee wa liyatazakkara ulul albaab

(நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!

Tafseer

وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
لِدَاوُۥدَ
தாவூதுக்கு
سُلَيْمَٰنَۚ
சுலைமானை
نِعْمَ ٱلْعَبْدُۖ
அவர் சிறந்த அடியார்
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
أَوَّابٌ
அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்

Wa wahabnaa li Daawooda Sulaimaan; ni'mal 'abd; innahoo awwaab

தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.

Tafseer