Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௯

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ  ( البقرة: ٢٧٩ )

And if not you do
فَإِن لَّمْ تَفْعَلُوا۟
நீங்கள் செய்யவில்லையென்றால்
then be informed of a war
فَأْذَنُوا۟ بِحَرْبٍ
அறியுங்கள்/போரை
from Allah
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
and His Messenger
وَرَسُولِهِۦۖ
இன்னும் அவனுடைய தூதர்
And if you repent
وَإِن تُبْتُمْ
நீங்கள் திருந்தினால்
then for you
فَلَكُمْ
உங்களுக்கு
(is)
رُءُوسُ
முதல்கள்
your capital
أَمْوَٰلِكُمْ
உங்கள்செல்வங்களின்
(do) not wrong
لَا تَظْلِمُونَ
அநீதி இழைக்க மாட்டீர்கள்
and not you will be wronged
وَلَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்

Fail lam taf'aloo faazanoo biharbim minal laahi wa Rasoolihee wa in tubtum falakum ru'oosu amwaalikum laa tazlimoona wa laa tuzlamoon (al-Baq̈arah 2:279)

Abdul Hameed Baqavi:

இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!

English Sahih:

And if you do not, then be informed of a war [against you] from Allah and His Messenger. But if you repent, you may have your principal – [thus] you do no wrong, nor are you wronged. ([2] Al-Baqarah : 279)

1 Jan Trust Foundation

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.