Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௫

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّيْ لَآ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِيْ سَبِيْلِيْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ۗ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ   ( آل عمران: ١٩٥ )

Then responded
فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
to them
لَهُمْ
அவர்களுக்கு
their Lord
رَبُّهُمْ
அவர்களுடைய இறைவன்
"Indeed I
أَنِّى
நிச்சயமாக நான்
(will) not (let go) waste
لَآ أُضِيعُ
வீணாக்கமாட்டேன்
deeds
عَمَلَ
(நற்)செயலை
(of the) doer
عَٰمِلٍ
(நற்)செயல்புரிபவரின்
among you
مِّنكُم
உங்களில்
[from]
مِّن
இருந்து
(whether) male
ذَكَرٍ
ஆண்
or
أَوْ
அல்லது
female
أُنثَىٰۖ
பெண்கள்
each of you
بَعْضُكُم
உங்களில் சிலர்
from
مِّنۢ
இருந்து
(the) other
بَعْضٍۖ
சிலர்
So those who
فَٱلَّذِينَ
எவர்கள்
emigrated
هَاجَرُوا۟
ஹிஜ்ரா சென்றார்கள்
and were driven out
وَأُخْرِجُوا۟
இன்னும் வெளியேற்றப்பட்டார்கள்
from
مِن
இருந்து
their homes
دِيَٰرِهِمْ
ஊர்கள்/தங்கள்
and were harmed
وَأُوذُوا۟
இன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்
in My way
فِى سَبِيلِى
எனது பாதையில்
and fought
وَقَٰتَلُوا۟
இன்னும் போர்செய்தார்கள்
and were killed -
وَقُتِلُوا۟
இன்னும் கொல்லப்பட்டார்கள்
surely I (will) remove
لَأُكَفِّرَنَّ
நிச்சயமாக அகற்றிடுவேன்
from them
عَنْهُمْ
அவர்களை விட்டு
their evil deeds
سَيِّـَٔاتِهِمْ
தீமைகளை/ அவர்களுடைய
and surely I will admit them
وَلَأُدْخِلَنَّهُمْ
இன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்
(to) Gardens flowing
جَنَّٰتٍ تَجْرِى
சொர்க்கங்கள்/ஓடும்
from
مِن
இருந்து
underneath them
تَحْتِهَا
அவற்றின் கீழ்
the rivers -
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
a reward
ثَوَابًا
நன்மை
from
مِّنْ
இருந்து
[near] Allah
عِندِ ٱللَّهِۗ
அல்லாஹ்விடம்
And Allah -
وَٱللَّهُ
அல்லாஹ்
with Him
عِندَهُۥ
அவனிடத்தில்தான்
(is the) best reward"
حُسْنُ ٱلثَّوَابِ
அழகிய/நற்கூலி

Fastajaaba lahum Rabbuhum annee laaa Udee'u 'amala 'aamilim minkum min zakarin aw unsaa ba'dukum mim ba'din fal lazeena haajaroo wa ukhrijoo min diyaarihim wa oozoo fee sabeelee wa qaataloo wa qutiloo la ukaffiranna 'anhum saiyi aatihim wa la udkhilanna hum Jannnatin tajree min tahtihal anhaaru sawaabam min 'indil laah; wallaahu 'indahoo husnus sawaab (ʾĀl ʿImrān 3:195)

Abdul Hameed Baqavi:

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.

English Sahih:

And their Lord responded to them, "Never will I allow to be lost the work of [any] worker among you, whether male or female; you are of one another. So those who emigrated or were evicted from their homes or were harmed in My cause or fought or were killed – I will surely remove from them their misdeeds, and I will surely admit them to gardens beneath which rivers flow as reward from Allah, and Allah has with Him the best reward." ([3] Ali 'Imran : 195)

1 Jan Trust Foundation

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.