Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௩

وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَأْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَۙ لَا تَأْتِيْهِمْ ۛ كَذٰلِكَ ۛنَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ  ( الأعراف: ١٦٣ )

And ask them
وَسْـَٔلْهُمْ
விசாரிப்பீராக/அவர்களிடம்
about the town
عَنِ ٱلْقَرْيَةِ
ஊர் பற்றி
which
ٱلَّتِى
எது
was
كَانَتْ
இருந்தது
situated
حَاضِرَةَ
அருகில்
(by) the sea
ٱلْبَحْرِ
கடலுக்கு
when
إِذْ
போது
they transgressed
يَعْدُونَ
வரம்பு மீறினார்கள்
in the (matter of) Sabbath
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமையில்
when
إِذْ
போது
came to them
تَأْتِيهِمْ
வந்தன/அவர்களிடம்
their fish
حِيتَانُهُمْ
மீன்கள்/அவர்களுடைய
(on the) day
يَوْمَ
கிழமையில்
(of) their Sabbath
سَبْتِهِمْ
அவர்களின் சனி
visibly
شُرَّعًا
தலைகளை நீட்டியவையாக
and (on the) day
وَيَوْمَ
நாளில்
not they had Sabbath
لَا يَسْبِتُونَۙ
அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்
(they did) not come to them
لَا تَأْتِيهِمْۚ
அவை வருவதில்லை/அவர்களிடம்
Thus
كَذَٰلِكَ
இவ்வாறு
We test them
نَبْلُوهُم
சோதித்தோம்/ அவர்களை
because they were
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்த காரணத்தால்
defiantly disobeying
يَفْسُقُونَ
பாவம் செய்வார்கள்

Was'alhum 'anil qaryatil latee kaanat haadiratal bahri iz ya'doona fis Sabt iz taateehim heetaanuhum yawma Sabtihim shurra'anw wa yawma laa yasbitoona laa taateehim; kazaalika nabloohum bimaa kaanoo yafsuqoon (al-ʾAʿrāf 7:163)

Abdul Hameed Baqavi:

(நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.

English Sahih:

And ask them about the town that was by the sea – when they transgressed in [the matter of] the sabbath – when their fish came to them openly on their sabbath day, and the day they had no sabbath they did not come to them. Thus did We give them trial because they were defiantly disobedient. ([7] Al-A'raf : 163)

1 Jan Trust Foundation

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.