Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௫

وَقَالَ الَّذِيْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا۠ اُنَبِّئُكُمْ بِتَأْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ   ( يوسف: ٤٥ )

But said
وَقَالَ
கூறினான்
the one who
ٱلَّذِى
எவன்
was saved
نَجَا
தப்பித்தான்
of the two
مِنْهُمَا
அவ்விருவரில்
and remembered
وَٱدَّكَرَ
இன்னும் நினைவு கூர்ந்தான்
after a period
بَعْدَ أُمَّةٍ
பின்னர்/சில ஆண்டு
"I
أَنَا۠
நான்
[I] will inform you
أُنَبِّئُكُم
அறிவிப்பேன்/ உங்களுக்கு
of its interpretation
بِتَأْوِيلِهِۦ
அவருடைய விளக்கத்தை
so send me forth
فَأَرْسِلُونِ
ஆகவே அனுப்புங்கள்/என்னை

Wa qaalal lazee najaa minhumaa waddakara ba'da ummatin ana unabbi'ukum bitalweelihee fa-arsiloon (Yūsuf 12:45)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.)

English Sahih:

But the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth." ([12] Yusuf : 45)

1 Jan Trust Foundation

அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.