Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௩

وَلَمَّا وَرَدَ مَاۤءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ ەۖ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِۚ قَالَ مَا خَطْبُكُمَا ۗقَالَتَا لَا نَسْقِيْ حَتّٰى يُصْدِرَ الرِّعَاۤءُ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ  ( القصص: ٢٣ )

And when he came
وَلَمَّا وَرَدَ
அவர் வந்தபோது
(to the) water
مَآءَ
நீர்நிலைக்கு
(of) Madyan
مَدْيَنَ
மத்யனுடைய
he found
وَجَدَ
கண்டார்
on it
عَلَيْهِ
அதனருகில்
a group
أُمَّةً
ஒரு கூட்டம்
of men
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்
watering
يَسْقُونَ
அவர்கள் நீர் புகட்டுகின்றனர்
and he found
وَوَجَدَ
கண்டார்
besides them besides them
مِن دُونِهِمُ
அவர்கள் அன்றி
two women
ٱمْرَأَتَيْنِ
இரண்டு பெண்களையும்
keeping back
تَذُودَانِۖ
தடுத்துக் கொண்டிருந்தனர்
He said
قَالَ
அவர் கேட்டார்
"What (is the) matter with both of you?"
مَا خَطْبُكُمَاۖ
உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?
They said
قَالَتَا
அவ்விருவரும்கூறினர்
"We cannot water "We cannot water
لَا نَسْقِى
நாங்கள் நீர் புகட்ட மாட்டோம்
until
حَتَّىٰ
வரை
take away
يُصْدِرَ
வெளியேற்றாத
the shepherds
ٱلرِّعَآءُۖ
மேய்ப்பவர்கள்
and our father
وَأَبُونَا
எங்கள் தந்தையோ
(is) a very old man"
شَيْخٌ
வயதான
(is) a very old man"
كَبِيرٌ
பெரியவர்

Wa lammaa warada maaa'a Madyana wajada 'alaihi ummatam minannaasi yasqoona wa wajada min doonihimum ra ataini tazoodaani qaala maa khatubkumaa qaalataa laa nasqee hataa yusdirar ri'aaa'u wa aboonaa shaikhun kabeer (al-Q̈aṣaṣ 28:23)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள்.

English Sahih:

And when he came to the water [i.e., well] of Madyan, he found there a crowd of people watering [their flocks], and he found aside from them two women holding back [their flocks]. He said, "What is your circumstance?" They said, "We do not water until the shepherds dispatch [their flocks]; and our father is an old man." ([28] Al-Qasas : 23)

1 Jan Trust Foundation

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு| “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.