Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௪

قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ عَلَيْنَا وَمَآ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ  ( آل عمران: ٨٤ )

Say
قُلْ
கூறுவீராக
"We believed
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and what (is) revealed
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
on us
عَلَيْنَا
எங்கள் மீது
and what was revealed
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
on
عَلَىٰٓ
மீது
Ibrahim
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
and Ismail
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
and Ishaq
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
and Yaqub
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
and the descendents
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
and what
وَمَآ
இன்னும் எது/
was given
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்
(to) Musa and Isa
مُوسَىٰ وَعِيسَىٰ
மூஸா/இன்னும் ஈஸா
and the Prophets
وَٱلنَّبِيُّونَ
இன்னும் நபிமார்கள்
from their Lord
مِن رَّبِّهِمْ
தங்கள் இறைவனிடமிருந்து
Not we make distinction
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
between any
بَيْنَ أَحَدٍ
ஒருவருக்கு மத்தியில்
of them
مِّنْهُمْ
இவர்களில்
and we
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
to Him
لَهُۥ
அவனுக்கே
(are) submissive
مُسْلِمُونَ
முற்றிலும் பணிந்தவர்கள்

Qul aamannaa billaahi wa maaa unzila 'alainaa wa maaa unzila 'alaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaa ootiya Moosaa wa 'Eesaa wan Nabiyyoona mir Rabbihim laa nufarriqu baina ahadim minhum wa nahnu lahoo muslimoon (ʾĀl ʿImrān 3:84)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.)

English Sahih:

Say, "We have believed in Allah and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Descendants [al-Asbat], and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [submitting] to Him." ([3] Ali 'Imran : 84)

1 Jan Trust Foundation

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.