Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௯

اَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَاِذَا جَاۤءَ الْخَوْفُ رَاَيْتَهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ تَدُوْرُ اَعْيُنُهُمْ كَالَّذِيْ يُغْشٰى عَلَيْهِ مِنَ الْمَوْتِۚ فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَى الْخَيْرِۗ اُولٰۤىِٕكَ لَمْ يُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْۗ وَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا  ( الأحزاب: ١٩ )

Miserly
أَشِحَّةً
மிகக் கருமிகளாக இருக்கின்றனர்
towards you
عَلَيْكُمْۖ
உங்கள் விஷயத்தில்
But when comes
فَإِذَا جَآءَ
வந்தால்
the fear
ٱلْخَوْفُ
பயம்
you see them
رَأَيْتَهُمْ
அவர்களை நீர் காண்பீர்
looking
يَنظُرُونَ
அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக
at you
إِلَيْكَ
உம் பக்கம்
revolving
تَدُورُ
சுழலக்கூடிய நிலையில்
their eyes
أَعْيُنُهُمْ
அவர்களது கண்கள்
like one who faints
كَٱلَّذِى يُغْشَىٰ
மயக்கம் அடைகின்றவனைப் போல்
faints
عَلَيْهِ
அவன் மீது
from [the] death
مِنَ ٱلْمَوْتِۖ
மரணத்தால்
But when departs
فَإِذَا ذَهَبَ
சென்றுவிட்டால்
the fear
ٱلْخَوْفُ
பயம்
they smite you
سَلَقُوكُم
உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்
with tongues
بِأَلْسِنَةٍ
நாவுகளினால்
sharp
حِدَادٍ
கூர்மையான
miserly
أَشِحَّةً
பேராசையுடையவர்களாக
towards the good
عَلَى ٱلْخَيْرِۚ
செல்வத்தின் மீது
Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
not they have believed
لَمْ يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ளவில்லை
so Allah made worthless
فَأَحْبَطَ
ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான்
so Allah made worthless
ٱللَّهُ
அல்லாஹ்
their deeds
أَعْمَٰلَهُمْۚ
அவர்களின் அமல்களை
And is
وَكَانَ
இருக்கின்றது
that
ذَٰلِكَ
இது
for Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
easy
يَسِيرًا
மிக எளிதாக

Ashihhatan 'alaikum faizaa jaaa'al khawfu ra aytahum yanzuroona ilaika tadooru a'yunuhum kallazee yughshaa 'alaihi minal mawti fa izaa zahabal khawfu salqookum bi alsinatin hidaadin ashibbatan 'alal khayr; ulaaa'ika lam yu'minoo fa ahbatal laahu a'maalahum; wa kaana zaalika 'alal laahi yaseeraa (al-ʾAḥzāb 33:19)

Abdul Hameed Baqavi:

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) யாதொரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பயம் நீங்கி (நம்பிக்கை யாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தை களைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இத்தகையவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.

English Sahih:

Indisposed toward you. And when fear comes, you see them looking at you, their eyes revolving like one being overcome by death. But when fear departs, they lash you with sharp tongues, indisposed toward [any] good. Those have not believed, so Allah has rendered their deeds worthless, and ever is that, for Allah, easy. ([33] Al-Ahzab : 19)

1 Jan Trust Foundation

(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.