Skip to main content

ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاۤءٌ مِّنْ نِّسَاۤءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّۚ وَلَا تَلْمِزُوْٓا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِۗ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ   ( الحجرات: ١١ )

O you who believe! O you who believe! O you who believe!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
(Let) not ridicule
لَا يَسْخَرْ
பரிகாசம் செய்ய வேண்டாம்
a people
قَوْمٌ
ஒரு கூட்டம்
[of] (another) people
مِّن قَوْمٍ
இன்னொரு கூட்டத்தை
perhaps that they may be
عَسَىٰٓ أَن يَكُونُوا۟
அவர்கள் இருக்கலாம்
better
خَيْرًا
சிறந்தவர்களாக
than them
مِّنْهُمْ
இவர்களை விட
and (let) not women
وَلَا نِسَآءٌ
பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம்
[of] (other) women
مِّن نِّسَآءٍ
பெண்களை
perhaps that they may be
عَسَىٰٓ أَن يَكُنَّ
அவர்கள் இருக்கலாம்
better
خَيْرًا
சிறந்தவர்களாக
than them
مِّنْهُنَّۖ
இவர்களை விட
And (do) not insult
وَلَا تَلْمِزُوٓا۟
இன்னும் குத்திப் பேச வேண்டாம்
yourselves
أَنفُسَكُمْ
உங்களை
and (do) not call each other
وَلَا تَنَابَزُوا۟
பட்டப் பெயர் சூட்டாதீர்கள்
by nicknames
بِٱلْأَلْقَٰبِۖ
தீய பட்டப் பெயர்களைக் கொண்டு
Wretched is the name
بِئْسَ ٱلِٱسْمُ
பெயர்களில் மிக கெட்டது
(of) disobedience
ٱلْفُسُوقُ
பாவிகள்
after
بَعْدَ
பின்னர்
the faith
ٱلْإِيمَٰنِۚ
நம்பிக்கை கொண்டதன்
And whoever (does) not repent
وَمَن لَّمْ يَتُبْ
யார் திருந்தி திரும்பவில்லையோ
then those they
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
(are) the wrongdoers
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo laa yaskhar qawmum min qawmin 'asaaa anyyakoonoo khairam minhum wa laa nisaaa'um min nisaaa'in 'Asaaa ay yakunna khairam minhunna wa laa talmizooo bil alqaab; bi'sal ismul fusooqu ba'dal eemaan; wa mal-lam yatub fa-ulaaa'ika humuz zaalimoon (al-Ḥujurāt 49:11)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.

English Sahih:

O you who have believed, let not a people ridicule [another] people; perhaps they may be better than them; nor let women ridicule [other] women; perhaps they may be better than them. And do not insult one another and do not call each other by [offensive] nicknames. Wretched is the name [i.e., mention] of disobedience after [one's] faith. And whoever does not repent – then it is those who are the wrongdoers. ([49] Al-Hujurat : 11)

1 Jan Trust Foundation

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.