Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௫

فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ  ( التوبة: ٥ )

Then when have passed
فَإِذَا ٱنسَلَخَ
முடிந்துவிட்டால்
the sacred months
ٱلْأَشْهُرُ
மாதங்கள்
the sacred months
ٱلْحُرُمُ
புனித(மானவை)
then kill
فَٱقْتُلُوا۟
கொல்லுங்கள்
the polytheists
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களை
wherever
حَيْثُ
எங்கு/கண்டீர்கள்
you find them
وَجَدتُّمُوهُمْ
எங்கு/கண்டீர்கள் அவர்களை
and seize them
وَخُذُوهُمْ
இன்னும் பிடியுங்கள் அவர்களை
and besiege them
وَٱحْصُرُوهُمْ
இன்னும் முற்றுகையிடுங்கள் அவர்களை
and sit (in wait)
وَٱقْعُدُوا۟
இன்னும் அமருங்கள்
for them
لَهُمْ
அவர்களுக்காக
(at) every
كُلَّ
ஒவ்வொரு
place of ambush
مَرْصَدٍۚ
பதுங்குமிடத்தில்
But if they repent
فَإِن تَابُوا۟
அவர்கள் திருந்தினால்
and establish
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினால்
the prayer
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
and give
وَءَاتَوُا۟
இன்னும் கொடுத்தால்
the zakah
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
then leave
فَخَلُّوا۟
விட்டுவிடுங்கள்
their way
سَبِيلَهُمْۚ
அவர்களுடைய வழியை
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Fa izansalakhal Ashhurul Hurumu faqtulul mushrikeena haisu wajattumoohum wa khuzoohum wahsuroohum qaq'udoo lahum kulla marsad; fa-in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fakhalloo sabeelahum; innal laaha Ghafoorur Raheem (at-Tawbah 9:5)

Abdul Hameed Baqavi:

(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர் புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பில் இருந்தும்) பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And when the inviolable months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give Zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful. ([9] At-Tawbah : 5)

1 Jan Trust Foundation

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.