Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௨

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَيْمٰنُ وَلٰكِنَّ الشَّيٰطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ۗ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَآ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۗ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ۗ وَمَا هُمْ بِضَاۤرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ ۗ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۗ وَلَبِئْسَ مَاشَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ ۗ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ   ( البقرة: ١٠٢ )

And they followed
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
what recite(d)
مَا تَتْلُوا۟
எவற்றை/ஓதின
the devils
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
over
عَلَىٰ
இல்
(the) kingdom
مُلْكِ
ஆட்சி
(of) Sulaiman
سُلَيْمَٰنَۖ
சுலைமானுடைய
And not disbelieved
وَمَا كَفَرَ
நிராகரிக்கவில்லை
Sulaiman
سُلَيْمَٰنُ
சுலைமான்
[and] but
وَلَٰكِنَّ
எனினும்
the devils
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
they teach
يُعَلِّمُونَ
கற்பித்தார்கள்
the people
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
[the] magic
ٱلسِّحْرَ
சூனியத்தை
and what
وَمَآ
இன்னும் எவற்றை
was sent down to
أُنزِلَ عَلَى
இறக்கப்பட்டன/மீது
the two angels
ٱلْمَلَكَيْنِ
இரு வானவர்கள்
in Babylon
بِبَابِلَ
பாபிலோனில்
Harut
هَٰرُوتَ
ஹறாரூத்
and Marut
وَمَٰرُوتَۚ
இன்னும் மாரூத்
And not they both teach
وَمَا يُعَلِّمَانِ
அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை
any one
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
unless
حَتَّىٰ
வரை
they [both] say
يَقُولَآ
அவ்விருவரும் கூறுவார்கள்
"Only we
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
(are) a trial
فِتْنَةٌ
ஒரு சோதனை
so (do) not disbelieve"
فَلَا تَكْفُرْۖ
ஆகவேநிராகரிக்காதே
But they learn
فَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
from those two
مِنْهُمَا
அவ்விருவரிடமிருந்து
what
مَا
எதை
[they] causes separation
يُفَرِّقُونَ
பிரிப்பார்கள்
with it
بِهِۦ
அதன் மூலம்
between
بَيْنَ
இடையில்
the man
ٱلْمَرْءِ
ஆண்
and his spouse
وَزَوْجِهِۦۚ
இன்னும் மனைவி/அவனுடைய
And not
وَمَا
இல்லை
they (could)
هُم
அவர்கள்
at all [be those who] harm
بِضَآرِّينَ
தீங்கிழைப்பவர்களாக
with it
بِهِۦ
அதன் மூலம்
any one
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
except
إِلَّا
தவிர
by permission
بِإِذْنِ
அனுமதி கொண்டே
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
And they learn
وَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
what
مَا
எவற்றை
harms them
يَضُرُّهُمْ
தீங்கிழைக்கும்/அவர்களுக்கு
and not profits them
وَلَا يَنفَعُهُمْۚ
இன்னும் பலனளிக்காது/அவர்களுக்கு
And indeed
وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
they knew
عَلِمُوا۟
அறிந்தார்கள்
that whoever buys it
لَمَنِ ٱشْتَرَىٰهُ
நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை
not for him
مَا لَهُۥ
இல்லை/அவருக்கு
in the Hereafter
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
any share
مِنْ خَلَٰقٍۚ
எந்த பாக்கியமும்
And surely evil
وَلَبِئْسَ
இன்னும் திட்டமாக கெட்டது
(is) what they sold
مَا شَرَوْا۟
எது/விற்றார்கள்
with it
بِهِۦٓ
அதற்கு பகரமாக
themselves
أَنفُسَهُمْۚ
தங்களையே
if they were (to) know
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே

Wattaba'oo maa tatlush Shayaateenu 'alaa mulki Sulaimaana wa maa kafara Sulaimaanu wa laakinnash Shayattena kafaroo yu'al limoonan naasas sihra wa maaa unzila 'alal malakaini bi Baabila Haaroota wa Maaroot; wa maa yu'allimaani min ahadin hattaa yaqoolaaa innamaa nahnu fitnatun falaa takfur fayata'al lamoona minhumaa maa yufarriqoona bihee bainal mar'i wa zawjih; wa maa hum bidaaarreena bihee min ahadin illaa bi-iznillah; wa yata'allamoona maa yadurruhum wa laa yanfa'uhum; wa laqad 'alimoo lamanish taraahu maa lahoo fil Aakhirati min khalaaq; wa labi'sa maa sharaw biheee anfusahum; law kaanoo ya'lamoon (al-Baq̈arah 2:102)

Abdul Hameed Baqavi:

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

English Sahih:

And they followed [instead] what the devils had recited during the reign of Solomon. It was not Solomon who disbelieved, but the devils disbelieved, teaching people magic and that which was revealed to the two angels at Babylon, Harout and Marout. But they [i.e., the two angels] do not teach anyone unless they say, "We are a trial, so do not disbelieve [by practicing magic]." And [yet] they learn from them that by which they cause separation between a man and his wife. But they do not harm anyone through it except by permission of Allah. And they [i.e., people] learn what harms them and does not benefit them. But they [i.e., the Children of Israel] certainly knew that whoever purchased it [i.e., magic] would not have in the Hereafter any share. And wretched is that for which they sold themselves, if they only knew. ([2] Al-Baqarah : 102)

1 Jan Trust Foundation

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?