Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௫

شَهْرُ رَمَضَانَ الَّذِيْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۗ وَمَنْ كَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ يُرِيْدُ اللّٰهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ ۖ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ   ( البقرة: ١٨٥ )

Month
شَهْرُ
மாதம்
(of) Ramadhaan
رَمَضَانَ
ரமழான்
(is) that
ٱلَّذِىٓ
எது
was revealed
أُنزِلَ
இறக்கப்பட்டது
therein
فِيهِ
அதில்
the Quran
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
a Guidance
هُدًى
நேர்வழியாக
for mankind
لِّلنَّاسِ
மக்களுக்கு
and clear proofs
وَبَيِّنَٰتٍ
இன்னும் சான்றுகளாக
of [the] Guidance
مِّنَ ٱلْهُدَىٰ
நேர்வழியின்
and the Criterion
وَٱلْفُرْقَانِۚ
இன்னும் பிரித்தறிவிப்பது
So whoever witnesses
فَمَن شَهِدَ
எவர்/தங்கி இருப்பார்
among you
مِنكُمُ
உங்களிலிருந்து
the month
ٱلشَّهْرَ
அம்மாதத்தில்
then he should fast in it
فَلْيَصُمْهُۖ
அவர் அதில் நோன்பிருக்கவும்
and whoever is
وَمَن كَانَ
இன்னும் எவர்/இருப்பார்
sick
مَرِيضًا
நோயாளியாக
or
أَوْ
அல்லது
on a journey
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
then prescribed number (should be made up)
فَعِدَّةٌ
கணக்கிடவும்
from days
مِّنْ أَيَّامٍ
இருந்து/நாட்கள்
other
أُخَرَۗ
மற்ற(வை)
Intends
يُرِيدُ
நாடுவான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for you
بِكُمُ
உங்களுக்கு
[the] ease
ٱلْيُسْرَ
இலகுவை
and not intends
وَلَا يُرِيدُ
இன்னும் நாடமாட்டான்
for you
بِكُمُ
உங்களுக்கு
[the] hardship
ٱلْعُسْرَ
சிரமத்தை
so that you complete
وَلِتُكْمِلُوا۟
இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக
the prescribed period
ٱلْعِدَّةَ
எண்ணிக்கையை
and that you magnify
وَلِتُكَبِّرُوا۟
இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
for [what] He guided you
عَلَىٰ مَا هَدَىٰكُمْ
உங்களை நேர்வழி நடத்தியதற்காக
so that you may (be) grateful
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Shahru Ramadaanallazeee unzila feehil Qur'aanu hudal linnaasi wa baiyinaatim minal hudaa wal furqaan; faman shahida minkumush shahra falyasumhu wa man kaana mareedan aw 'alaa safarin fa'iddatum min ayyaamin ukhar; yureedul laahu bikumul yusra wa laa yureedu bikumul 'usra wa litukmilul 'iddata wa litukabbirul laaha 'alaa maa hadaakum wa la'allakum tashkuroon (al-Baq̈arah 2:185)

Abdul Hameed Baqavi:

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!

English Sahih:

The month of Ramadan [is that] in which was revealed the Quran, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the crescent of] the month, let him fast it; and whoever is ill or on a journey – then an equal number of other days. Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful. ([2] Al-Baqarah : 185)

1 Jan Trust Foundation

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).