Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௪௦

اِذْ تَمْشِيْٓ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰى مَنْ يَّكْفُلُهٗ ۗفَرَجَعْنٰكَ اِلٰٓى اُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ەۗ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ەۗ فَلَبِثْتَ سِنِيْنَ فِيْٓ اَهْلِ مَدْيَنَ ەۙ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يّٰمُوْسٰى  ( طه: ٤٠ )

When was going
إِذْ تَمْشِىٓ
நடந்து சென்றபோது
your sister
أُخْتُكَ
உமது சகோதரி
and she said
فَتَقُولُ
கூறினாள்
"Shall I show you
هَلْ أَدُلُّكُمْ
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
[to] (one) who will nurse and rear him'?"
عَلَىٰ مَن يَكْفُلُهُۥۖ
அவரை பொறுப்பேற்பவரை
So We returned you
فَرَجَعْنَٰكَ
உம்மை திரும்பக் கொண்டு வந்தோம்
to your mother
إِلَىٰٓ أُمِّكَ
உமது தாயிடமே
that may be cooled
كَىْ تَقَرَّ
குளிர்வதற்காக
her eyes
عَيْنُهَا
அவளது கண்
and not she grieves
وَلَا تَحْزَنَۚ
இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக
And you killed
وَقَتَلْتَ
நீர் கொன்று விட்டீர்
a man
نَفْسًا
ஓர் உயிரை
but We saved you
فَنَجَّيْنَٰكَ
உம்மை நாம் பாதுகாத்தோம்
from the distress
مِنَ ٱلْغَمِّ
அந்த துக்கத்திலிருந்து
and We tried you
وَفَتَنَّٰكَ
இன்னும் உம்மை நாம் சோதித்தோம்
(with) a trial
فُتُونًاۚ
பல சோதனைகளில்
Then you remained
فَلَبِثْتَ
ஆக, நீர் தங்கினீர்
(some) years
سِنِينَ
பல ஆண்டுகள்
with (the) people
فِىٓ أَهْلِ
வாசிகளிடம்
(of) Madyan
مَدْيَنَ
மத்யன்
Then
ثُمَّ
பிறகு
you came
جِئْتَ
நீர் அடைந்தீர்
at the decreed (time)
عَلَىٰ قَدَرٍ
ஒரு குறிப்பிட்ட நேரத்தை
O Musa!
يَٰمُوسَىٰ
மூஸாவே!

Iz tamsheee ukhtuka fataqoolu hal adullukum 'alaa mai yakfuluhoo faraja 'naaka ilaaa ummika kai taqarra 'ainuhaa wa laa tahzan; wa qatalta nafsan fanajjainaaka minal ghammi wa fatannaaka futoonaa; falabista sineena feee ahli Madyana summa ji'ta 'alaa qadariny yaa Moosa (Ṭāʾ Hāʾ 20:40)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய சகோதரி சென்று (உங்களை எடுத்தவர் களிடம்) "இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறும்படிச் செய்து, உங்கள் தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உங்கள் தாயிடமே உங்களைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீங்கள் ஓர் மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீங்கள் கொண்ட கவலையில் இருந்து உங்களைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உங்களைப் பல வகைகளிலும் சோதித்த பின்னர், மதியன்வாசிகளிடமும் நீங்கள் பல வருடங்கள் தங்கியிருந்தீர்கள். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீங்கள் (நம் தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்கள்.

English Sahih:

[And We favored you] when your sister went and said, 'Shall I direct you to someone who will be responsible for him?' So We restored you to your mother that she might be content and not grieve. And you killed someone, but We saved you from retaliation and tried you with a [severe] trial. And you remained [some] years among the people of Madyan. Then you came [here] at the decreed time, O Moses. ([20] Taha : 40)

1 Jan Trust Foundation

(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.