Skip to main content

ஸூரத்துந் நூர் வசனம் ௩௩

وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۗوَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِيْٓ اٰتٰىكُمْ ۗوَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَاۤءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ  ( النور: ٣٣ )

And let be chaste
وَلْيَسْتَعْفِفِ
ஒழுக்கமாக இருக்கட்டும்
those who (do) not find
ٱلَّذِينَ لَا يَجِدُونَ
வசதி பெறாதவர்கள்
(means for) marriage
نِكَاحًا
திருமணத்திற்கு
until
حَتَّىٰ
வரை
Allah enriches them
يُغْنِيَهُمُ
அவர்களை நிறைவு செய்கிற
Allah enriches them
ٱللَّهُ
அல்லாஹ்
from His Bounty
مِن فَضْلِهِۦۗ
தன் அருளால்
And those who seek
وَٱلَّذِينَ يَبْتَغُونَ
இன்னும் விரும்புபவர்கள்
the writing
ٱلْكِتَٰبَ
பத்திரம் எழுதிட
from (those) whom possess
مِمَّا مَلَكَتْ
சொந்தமாக்கிக் கொண்டவர்களில்
your right hands
أَيْمَٰنُكُمْ
உங்கள் வலக்கரங்கள்
then give them (the) writing
فَكَاتِبُوهُمْ
எழுதிக் கொடுங்கள் அவர்களுக்கு
if you know
إِنْ عَلِمْتُمْ
நீங்கள் அறிந்தால்
in them
فِيهِمْ
அவர்களில்
any good
خَيْرًاۖ
நன்மையை
and give them
وَءَاتُوهُم
இன்னும் கொடுங்கள் அவர்களுக்கு
from the wealth of Allah
مِّن مَّالِ
செல்வத்திலிருந்து
the wealth of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
which He has given you
ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْۚ
எது/கொடுத்தான்/உங்களுக்கு
And (do) not compel
وَلَا تُكْرِهُوا۟
நிர்ப்பந்திக்காதீர்கள்
your slave girls
فَتَيَٰتِكُمْ
உங்கள் பெண் அடிமைகளை
to [the] prostitution
عَلَى ٱلْبِغَآءِ
விபச்சாரத்தில்
if they desire
إِنْ أَرَدْنَ
விரும்பினால்
chastity
تَحَصُّنًا
பத்தினித்தனத்தை
that you may seek
لِّتَبْتَغُوا۟
நீ விரும்பியதற்காக
temporary gain
عَرَضَ
பொருளை
(of) the life (of) the world
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கையின்
And whoever
وَمَن
யார்
compels them
يُكْرِههُّنَّ
அவர்களை நிர்ப்பந்திப்பாரோ
then indeed Allah
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
after after
مِنۢ بَعْدِ
பின்னர்
their compulsion
إِكْرَٰهِهِنَّ
அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
கருணை காட்டுபவன்

Wal yasta'fifil lazeena laa yajidoona nikaahan hata yughniyahumul laahu mi fadlih; wallazeena yabtaghoonal kitaaba mimmaa malakat aimaanukum fakaatiboohum in 'alimtum feehim khairanw wa aatoohum mimmaalil laahil lazeee aataakum; wa laa tukrihoo fatayaatikum 'alal bighaaa'i in aradna tahassunal litabtaghoo 'aradal hayaatid dunyaa; wa mai yukrihhunna fa innal laaha mim ba'di ikraahihinna Ghafoor Raheem (an-Nūr 24:33)

Abdul Hameed Baqavi:

(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்துவிடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

English Sahih:

But let them who find not [the means for] marriage abstain [from sexual relations] until Allah enriches them from His bounty. And those who seek a contract [for eventual emancipation] from among whom your right hands possess – then make a contract with them if you know there is within them goodness and give them from the wealth of Allah which He has given you. And do not compel your slave girls to prostitution, if they desire chastity, to seek [thereby] the temporary interests of worldly life. And if someone should compel them, then indeed, Allah is [to them], after their compulsion, Forgiving and Merciful. ([24] An-Nur : 33)

1 Jan Trust Foundation

விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.