Skip to main content
bismillah

سُورَةٌ
இது ஒரு அத்தியாயமாகும்
أَنزَلْنَٰهَا
இதை நாம் இறக்கினோம்
وَفَرَضْنَٰهَا
இதை நாம் கடமையாக்கினோம்
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
فِيهَآ
இதில்
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
بَيِّنَٰتٍ
தெளிவான
لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக

Sooratun anzalnaahaa wa faradnaahaa wa anzalnaa feehaaa Aayaatim baiyinaatil la'allakum tazakkaroon

(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதனை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். அன்றி, இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கி வைத்தோம்.

Tafseer

ٱلزَّانِيَةُ
விபச்சாரி
وَٱلزَّانِى
இன்னும் விபசாரன்
فَٱجْلِدُوا۟
அடியுங்கள்
كُلَّ وَٰحِدٍ
ஒவ்வொருவரையும்
مِّنْهُمَا
அவ்விருவரில்
مِا۟ئَةَ
நூறு
جَلْدَةٍۖ
அடி
وَلَا
பிடித்துவிட வேண்டாம்
تَأْخُذْكُم
பிடித்துவிட வேண்டாம் உங்களை
بِهِمَا
அந்த இருவர் மீது
رَأْفَةٌ
இரக்கம்
فِى دِينِ
மார்க்கத்தில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டவர்களாக
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
மறுமை நாளையும்
وَلْيَشْهَدْ
ஆஜராகட்டும்
عَذَابَهُمَا
அவ்விருவரின் தண்டனைக்கு
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Azzaaniyatu wazzaanee fajlidoo kulla waahidim minhumaa mi'ata jaldatinw wa laa taakhuzkum bihimaa raafatun fee deenil laahi in kuntum tu'minoona billaahi wal Yawmil Aakhiri wal yashhad 'azaabahumaa taaa'ifatum minal mu'mineen

விபச்சாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.

Tafseer

ٱلزَّانِى
ஒரு விபசாரன்
لَا يَنكِحُ
உ(டலு)றவு வைக்க மாட்டான்
إِلَّا زَانِيَةً
தவிர/ஒரு விபசாரி
أَوْ
அல்லது
مُشْرِكَةً
இணைவைப்பவள்
وَٱلزَّانِيَةُ
இன்னும் விபசாரி
لَا يَنكِحُهَآ
அவளுடன் உ(டலு)றவு வைக்கமாட்டான்
إِلَّا
தவிர
زَانٍ
ஒரு விபசாரன்
أَوْ
அல்லது
مُشْرِكٌۚ
இணைவைப்பவன்
وَحُرِّمَ
தடுக்கப்பட்டுள்ளது
ذَٰلِكَ
இது
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Azzaanee laa yankihu illaa zaaniyatan aw mushrikatanw wazzaaniyatu laa yankihuhaaa illaa zaanin aw mushrik; wa hurrima zaalika 'alal mu'mineen

(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يَرْمُونَ
ஏசுவார்களோ
ٱلْمُحْصَنَٰتِ
பத்தினிகளை
ثُمَّ
பிறகு
لَمْ يَأْتُوا۟
அவர்கள் கொண்டுவரவில்லை என்றால்
بِأَرْبَعَةِ
நான்கு
شُهَدَآءَ
சாட்சிகளை
فَٱجْلِدُوهُمْ
அடியுங்கள் அவர்களை
ثَمَٰنِينَ
எண்பது
جَلْدَةً
அடி
وَلَا تَقْبَلُوا۟
ஏற்காதீர்கள்
لَهُمْ
அவர்களின்
شَهَٰدَةً
சாட்சியத்தை
أَبَدًاۚ
ஒருபோதும்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Wallazeena yarmoonal muhsanaati summa lam yaatoo bi-arba'ati shuhadaaa'a fajlidoohum samaaneena jaldatanw wa laa taqbaloo lahum shahaadatan abadaa; wa ulaaa'ika humul faasiqoon

எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
تَابُوا۟
திருந்தினார்கள்
مِنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَ
அதற்குப்
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Illal lazeena taaboo mim ba'di zaalika wa aslahoo fa innal laaha Ghafoorur Raheem

ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்பு கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يَرْمُونَ
ஏசுகிறார்களோ
أَزْوَٰجَهُمْ
தங்களது மனைவிகளை
وَلَمْ يَكُن
இல்லையோ
لَّهُمْ
அவர்களிடம்
شُهَدَآءُ
சாட்சிகள்
إِلَّآ
தவிர
أَنفُسُهُمْ
அவர்களை
فَشَهَٰدَةُ
சாட்சிகள் சொல்ல வேண்டும்
أَحَدِهِمْ
அவர்களில் ஒருவர்
أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ
நான்கு முறை சாட்சி சொல்வது
بِٱللَّهِۙ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
إِنَّهُۥ
நிச்சயமாக தான்
لَمِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மை கூறுபவர்களில்

Wallazeena yarmoona azwaajahum wa lam yakul lahum shuhadaaa'u illaaa anfusuhum fashahaadatu ahadihim arb'u shahaadaatim billaahi innahoo laminas saadiqeen

எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபச்சாரத்தைக் கொண்டு) குற்றம்கூறித் தங்களையன்றி அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,

Tafseer

وَٱلْخَٰمِسَةُ
ஐந்தாவது முறை
أَنَّ
நிச்சயமாக
لَعْنَتَ
சாபம் உண்டாகட்டும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْهِ
தன் மீது
إِن كَانَ
ஒருவனாக இருந்தால்
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய் கூறுபவர்களில்

Wal khaamisatu anna la'natal laahi 'alaihi in kaana minal kaazibeen

ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்.

Tafseer

وَيَدْرَؤُا۟
தடுக்கும்
عَنْهَا
அவளை விட்டும்
ٱلْعَذَابَ
தண்டனையை
أَن تَشْهَدَ
அவள் சாட்சி சொல்வது
أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ
நான்கு முறை சாட்சி சொல்வது
بِٱللَّهِۙ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
பொய் கூறுபவர்களில் உள்ளவர்

Wa yadra'u anhal 'azaaba an tashhada arba'a shahaa daatim billaahi innahoo laminal kaazibeen

(அவனுடைய மனைவி குற்றமற்றவளாயினும் அவள்மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்படவேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதனை மறுத்து) நிச்சயமாக(த் தன்னுடைய) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து,

Tafseer

وَٱلْخَٰمِسَةَ
ஐந்தாவது முறை
أَنَّ
நிச்சயமாக
غَضَبَ
சாபம் உண்டாகட்டும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْهَآ
தன் மீது
إِن كَانَ
அவர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மை கூறுபவர்களில்

Wal khaamisata anna ghadabal laahi 'alaihaaa in kaana minas saadiqeen

ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்.)

Tafseer

وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனது கருணையும்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
تَوَّابٌ
பிழை பொறுப்பவனாகவும்
حَكِيمٌ
ஞானவானாகவும்

Wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo wa annal laaha Tawwaabun Hakeem

அல்லாஹ்வினுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனாகவும் இல்லாதிருந்தால் (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்).

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நூர்
القرآن الكريم:النور
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):An-Nur
ஸூரா:24
வசனம்:64
Total Words:1317
Total Characters:5596
Number of Rukūʿs:9
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:102
Starting from verse:2791