Skip to main content

ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௩

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّآ اَتٰىهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ  ( السجدة: ٣ )

Or (do) they say
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
"He invented it?"
ٱفْتَرَىٰهُۚ
இதை அவர் இட்டுக் கட்டினார் என்று
Nay
بَلْ
மாறாக
it
هُوَ
இதுதான்
(is) the truth
ٱلْحَقُّ
உண்மையா(ன வேதமா)கும்
from your Lord
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
that you may warn
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
a people
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
not has come to them
مَّآ أَتَىٰهُم
அவர்களிடம் வராத
any warner
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பவர் எவரும்
before you before you
مِّن قَبْلِكَ
இதற்கு முன்னர்
so that they may be guided
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக

Am yaqooloonaf taraahu bal huwal haqqu mir rabbika litunzira qawma maaa ataahum min nazeerim min qablika la'allahum yahtadoon (as-Sajdah 32:3)

Abdul Hameed Baqavi:

(நமது நபி) "இதனை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்" என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உங்களது இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உங்களுக்கு முன்னர் இதுவரையில் யாதொரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!

English Sahih:

Or do they say, "He invented it"? Rather, it is the truth from your Lord, [O Muhammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided. ([32] As-Sajdah : 3)

1 Jan Trust Foundation

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).