Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laaam-Meeem

அலிஃப்; லாம்; மீம்.

Tafseer

تَنزِيلُ
இறக்கப்பட்ட
ٱلْكِتَٰبِ
வேதமாகும்
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِ
இதில்
مِن رَّبِّ
இறைவனிடமிருந்து
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Tanzeelul Kitaabi 'laaraiba feehi mir rabbil 'aalameen

(நபியே! உங்கள்மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.

Tafseer

أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
ٱفْتَرَىٰهُۚ
இதை அவர் இட்டுக் கட்டினார் என்று
بَلْ
மாறாக
هُوَ
இதுதான்
ٱلْحَقُّ
உண்மையா(ன வேதமா)கும்
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
مَّآ أَتَىٰهُم
அவர்களிடம் வராத
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பவர் எவரும்
مِّن قَبْلِكَ
இதற்கு முன்னர்
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக

Am yaqooloonaf taraahu bal huwal haqqu mir rabbika litunzira qawma maaa ataahum min nazeerim min qablika la'allahum yahtadoon

(நமது நபி) "இதனை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்" என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உங்களது இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உங்களுக்கு முன்னர் இதுவரையில் யாதொரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!

Tafseer

ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
فِى سِتَّةِ
ஆறு நாட்களில்
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்தான்
عَلَى ٱلْعَرْشِۖ
அர்ஷின் மீது
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
مِّن دُونِهِۦ
அவனையன்றி
مِن وَلِىٍّ
பொருப்பாளரோ
وَلَا شَفِيعٍۚ
பரிந்துறையாளரோ
أَفَلَا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா ?

Allaahul lazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati ayyaam;Thummas tawaa 'alal 'arsh; maa lakum min doonihee minw-wwaliyyinw-wala shafee'; afala tatazakkaroon

அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களை) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறவேண்டாமா?

Tafseer

يُدَبِّرُ
அவன் திட்டமிட்டு நிர்வகிக்கின்றான்
ٱلْأَمْرَ
காரியத்தை
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
إِلَى ٱلْأَرْضِ
பூமி வரை
ثُمَّ
பிறகு
يَعْرُجُ
அது உயருகிறது
إِلَيْهِ
அவன் பக்கம்
فِى يَوْمٍ
ஒரு நாளில்
كَانَ
இருக்கிறது
مِقْدَارُهُۥٓ
அதன் அளவு
أَلْفَ
ஆயிரம்
سَنَةٍ
ஆண்டுகளாக
مِّمَّا تَعُدُّونَ
நீங்கள் எண்ணுகின்றபடி

Yudabbirul amra minas samaaa'i ilal ardi Thumma ya'ruju ilai Thumma ya'ruju ilaihi fee yawmin kaana miqdaaruhoooo alfa sanatim mimmaa ta'uddoon

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்கு படுத்துகின்றான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.

Tafseer

ذَٰلِكَ
அவன்தான்
عَٰلِمُ
அறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவானதை(யும்)
وَٱلشَّهَٰدَةِ
தெரிவதையும்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்

Zaalika 'aalimul ghaybi wa shahaadatil 'azeezur raheem

அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன். அன்றி, (அனைத்தையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱلَّذِىٓ أَحْسَنَ
அவன் செம்மையாக்கினான்
كُلَّ شَىْءٍ
ஒவ்வொன்றையும்
خَلَقَهُۥۖ
அதைப் படைத்தான்
وَبَدَأَ
இன்னும் ஆரம்பித்தான்
خَلْقَ
படைப்பதை
ٱلْإِنسَٰنِ
மனிதனை
مِن طِينٍ
களிமண்ணிலிருந்து

Allazee ahsana kulla shai in khalaqa; wa bada a khalqal insaani min teen

அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.

Tafseer

ثُمَّ
பிறகு
جَعَلَ
உருவாக்கினான்
نَسْلَهُۥ
அவனது சந்ததிகளை
مِن سُلَٰلَةٍ
வெளியேறக்கூடிய நீரிலிருந்து
مِّن مَّآءٍ
நீரிலிருந்து
مَّهِينٍ
மென்மையான

Thumma ja'ala naslahoo min sulaalatim mim maaa'immaheen

பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை படைக்கின்றான்.

Tafseer

ثُمَّ
பிறகு
سَوَّىٰهُ
அவனை சமமாக்கினான்
وَنَفَخَ
இன்னும் ஊதினான்
فِيهِ
அவனில்
مِن رُّوحِهِۦۖ
தனது உயிரிலிருந்து
وَجَعَلَ
இன்னும் அவன் அமைத்தான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلسَّمْعَ
செவியை(யும்)
وَٱلْأَبْصَٰرَ
பார்வைகளையும்
وَٱلْأَفْـِٔدَةَۚ
இதயங்களையும்
قَلِيلًا
குறைவாகவே
مَّا تَشْكُرُونَ
நன்றி செலுத்துகின்றீர்கள்

Thumma sawwaahu wa nafakha feehi mir roohihih; wa ja'ala lakumus sam'a wal-absaara wal-af'idah; taqaleelam maa tashkuroon

பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத் தன்னுடைய "ரூஹை" அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!

Tafseer

وَقَالُوٓا۟
அவர்கள் கூறுகின்றனர்
أَءِذَا ضَلَلْنَا
நாங்கள் மறைந்து விட்டால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَءِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
لَفِى خَلْقٍ
படைப்பில் (படைக்கப்படுவோமா)
جَدِيدٍۭۚ
புதிய
بَلْ هُم
மாறாக/அவர்கள்
بِلِقَآءِ
சந்திப்பை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றவர்கள்

Wa qaalooo 'a-izaa dalalnaa fil ardi 'a-innaa lafee khalqin jadeed; bal hum biliqaaa'i rabbihim kaafirroon

"(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஸ் ஸஜ்தா
القرآن الكريم:السجدة
ஸஜ்தா (سجدة):15
ஸூரா (latin):As-Sajdah
ஸூரா:32
வசனம்:30
Total Words:380
Total Characters:1580
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:75
Starting from verse:3503