Skip to main content

قُلْ
கூறுவீராக!
يَتَوَفَّىٰكُم
உங்களை உயிர் கைப்பற்றுவார்
مَّلَكُ ٱلْمَوْتِ
மலக்குல் மவுத்
ٱلَّذِى
எவர்
وُكِّلَ
நியமிக்கப்பட்டார்
بِكُمْ
உங்களுக்கு
ثُمَّ
பிறகு
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Qul yatawaffaakum malakul mawtil lazee wukkila bikum Thumma ilaa rabbikum turja'oon

ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் "மலக்குல் மவ்த்து" (என்ற மலக்குத்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்."

Tafseer

وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
إِذِ
சமயத்தை
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
نَاكِسُوا۟
தாழ்த்தியவர்களாக
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
رَبَّنَآ
எங்கள் இறைவா!
أَبْصَرْنَا
நாங்கள் பார்த்தோம்
وَسَمِعْنَا
இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்
فَٱرْجِعْنَا
ஆகவே, எங்களை திரும்ப அனுப்பு!
نَعْمَلْ
நாங்கள் செய்வோம்
صَٰلِحًا
நற்செயல்களை
إِنَّا مُوقِنُونَ
நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்

Wa law taraaa izil mujrimoona naakisoo ru'oosihim 'inda rabbihim rabbanaaa absarnaa wa sami'naa farji'naa na'mal saalihan innaa mooqinoon

(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக "எங்கள் இறைவனே! எங்களுடைய கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பி வை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்" என்றும் கூறுவதை நீங்கள் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.)

Tafseer

وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
لَءَاتَيْنَا
கொடுத்திருப்போம்
كُلَّ
எல்லா
نَفْسٍ
ஆன்மாவிற்கும்
هُدَىٰهَا
அதற்குரிய நேர்வழியை
وَلَٰكِنْ
எனினும்
حَقَّ
உறுதியாகி விட்டது
ٱلْقَوْلُ
வாக்கு
مِنِّى
என்னிடமிருந்து
لَأَمْلَأَنَّ
நிச்சயமாக நான் நிரப்புவேன்
جَهَنَّمَ
நரகத்தை
مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களில் இருந்து(ம்)
وَٱلنَّاسِ
இன்னும் மனிதர்கள்
أَجْمَعِينَ
அனைவரிலிருந்தும்

Wa law shi'naa la-aatainaa kulla nafsin hudaahaa wa laakin haqqal qawlu minnee la amla'anna jahannama minal jinnati wannaasi ajma'een

நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின்களையும் மனிதர்(களில் உள்ள பாவி)களையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம்முடைய தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது.

Tafseer

فَذُوقُوا۟
சுவையுங்கள்!
بِمَا نَسِيتُمْ
நீங்கள் மறந்த காரணத்தால்
لِقَآءَ
சந்திப்பை
يَوْمِكُمْ
உங்கள் நாளின்
هَٰذَآ
இந்த
إِنَّا
நிச்சயமாக நாம்
نَسِينَٰكُمْۖ
உங்களை மறந்து விட்டோம்
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்!
عَذَابَ
வேதனையை
ٱلْخُلْدِ
நிரந்தரமான
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக

Fazooqoo bimaa naseetum liqaaa'a yawminkum haaza innaa naseenaakum wa zooqoo 'azaabal khuldi bimaa kuntum ta'maloon

ஆகவே "(நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்" (என்றும் கூறப்படும்).

Tafseer

إِنَّمَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
ٱلَّذِينَ
எவர்கள்
إِذَا ذُكِّرُوا۟
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
بِهَا
அவற்றின் மூலம்
خَرُّوا۟
வீழ்ந்து விடுவார்கள்
سُجَّدًا
சிரம் பணிந்தவர்களாக
وَسَبَّحُوا۟
இன்னும் துதிப்பார்கள்
بِحَمْدِ
புகழ்ந்து
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يَسْتَكْبِرُونَ۩
பெருமையடிக்க மாட்டார்கள்

Innamaa yu'minu bi aayaatinal lazeena izaa zukkiroo bihaa kharroo sujjadanw wa sabbahoo bihamdi rabbihim wa hum laa yastakbiroon

நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கின்றார்களோ அவர்கள்தாம் நம்முடைய வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.

Tafseer

تَتَجَافَىٰ
தூரமாக இருக்கும்
جُنُوبُهُمْ
அவர்களின் விலாக்கள்
عَنِ ٱلْمَضَاجِعِ
படுக்கைகளை விட்டு
يَدْعُونَ
வணங்குவார்கள்
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
خَوْفًا
பய(த்துடனு)ம்
وَطَمَعًا
ஆசையுடனும்
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்

Tatajaafaa junoobuhum 'anil madaaji'i yad'oona rabbahum khawfanw wa tama'anw wa mimmaa razaqnaahum yunfiqoon

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.

Tafseer

فَلَا تَعْلَمُ
அறியாது
نَفْسٌ
எந்த ஓர் ஆன்மாவும்
مَّآ أُخْفِىَ
மறைத்து வைக்கப்பட்டுள்ளதை
لَهُم
அவர்களுக்காக
مِّن قُرَّةِ
குளிர்ச்சியான
أَعْيُنٍ
கண்களுக்கு
جَزَآءًۢ
கூலியாக
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு

Falaa ta'lamu nafsum maaa ukhfiya lahum min qurrati a'yunin jazaaa'am bimaa kaanoo ya'maloon

அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார் படுத்தப்பட்டுள்ளன.)

Tafseer

أَفَمَن كَانَ
?/இருக்கின்றவர்
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
كَمَن كَانَ
இருக்கின்றவரைப் போன்று
فَاسِقًاۚ
பாவியாக
لَّا يَسْتَوُۥنَ
அவர்கள் சமமாக மாட்டார்கள்

Afaman kaana mu'minan kaman kaana faasiqaa; laa yasta woon

நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள்.

Tafseer

أَمَّا
ஆக,
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فَلَهُمْ
அவர்களுக்கு
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்
نُزُلًۢا
விருந்தோம்பலாக
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு

Ammal lazeena aamanoo wa 'amilus saalihaati falahum jannaatul maawa nuzulam bimaa kaanoo ya'maloon

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்) செயல்களின் காரணமாக சுவனபதி தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள்.

Tafseer

وَأَمَّا
ஆக
ٱلَّذِينَ فَسَقُوا۟
பாவம் செய்தவர்கள்
فَمَأْوَىٰهُمُ
அவர்களின் தங்குமிடம்
ٱلنَّارُۖ
நரகமாகும்
كُلَّمَآ أَرَادُوٓا۟
அவர்கள் நாடும்போதெல்லாம்
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறுவதற்கு
مِنْهَآ
அதிலிருந்து
أُعِيدُوا۟
அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்
فِيهَا
அதில்
وَقِيلَ
இன்னும் சொல்லப்படும்
لَهُمْ
அவர்களுக்கு
ذُوقُوا۟
சுவையுங்கள்
عَذَابَ
வேதனையை
ٱلنَّارِ
நரக
ٱلَّذِى كُنتُم
நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த

Wa ammal lazeena fasaqoo famaawaahumn Naaru kullamaaa araadooo any yakhrujoo minhaaa u'eedoo feehaa wa qeela lahum zooqoo 'zaaaban Naaril lazee kuntum bihee tukazziboon

எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.

Tafseer