Skip to main content

ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௨

وَلَوْ تَرٰىٓ اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْۗ رَبَّنَآ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ   ( السجدة: ١٢ )

And if you (could) see
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
when
إِذِ
சமயத்தை
the criminals
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
(will) hang
نَاكِسُوا۟
தாழ்த்தியவர்களாக
their heads
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
before their Lord
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
"Our Lord
رَبَّنَآ
எங்கள் இறைவா!
we have seen
أَبْصَرْنَا
நாங்கள் பார்த்தோம்
and we have heard
وَسَمِعْنَا
இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்
so return us
فَٱرْجِعْنَا
ஆகவே, எங்களை திரும்ப அனுப்பு!
we will do
نَعْمَلْ
நாங்கள் செய்வோம்
righteous (deeds)
صَٰلِحًا
நற்செயல்களை
Indeed we (are now) certain"
إِنَّا مُوقِنُونَ
நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்

Wa law taraaa izil mujrimoona naakisoo ru'oosihim 'inda rabbihim rabbanaaa absarnaa wa sami'naa farji'naa na'mal saalihan innaa mooqinoon (as-Sajdah 32:12)

Abdul Hameed Baqavi:

(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக "எங்கள் இறைவனே! எங்களுடைய கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பி வை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்" என்றும் கூறுவதை நீங்கள் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.)

English Sahih:

If you could but see when the criminals are hanging their heads before their Lord, [saying], "Our Lord, we have seen and heard, so return us [to the world]; we will work righteousness. Indeed, we are [now] certain." ([32] As-Sajdah : 12)

1 Jan Trust Foundation

மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).