Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪

مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِيْ جَوْفِهٖ ۚوَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰـِٕۤيْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚوَمَا جَعَلَ اَدْعِيَاۤءَكُمْ اَبْنَاۤءَكُمْۗ ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ۗوَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ  ( الأحزاب: ٤ )

Not Allah (has) made
مَّا جَعَلَ
அமைக்கவில்லை
Allah (has) made
ٱللَّهُ
அல்லாஹ்
for any man
لِرَجُلٍ
ஒரு மனிதனுக்கு
[of] two hearts
مِّن قَلْبَيْنِ
இரு உள்ளங்களை
in his interior
فِى جَوْفِهِۦۚ
அவனது உடலில்
And not He (has) made
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
your wives
أَزْوَٰجَكُمُ
உங்கள்மனைவிகளை
whom
ٱلَّٰٓـِٔى
எவர்கள்
you declare unlawful
تُظَٰهِرُونَ
ளிஹார்செய்கின்றீர்கள்
[of them]
مِنْهُنَّ
அவர்களில்
(as) your mothers
أُمَّهَٰتِكُمْۚ
உங்கள் தாய்மார்களாக
And not He has made
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
your adopted sons
أَدْعِيَآءَكُمْ
வளர்ப்புபிள்ளைகளை உங்கள்
your sons
أَبْنَآءَكُمْۚ
உங்கள் பிள்ளைகளாக
That
ذَٰلِكُمْ
அது
(is) your saying
قَوْلُكُم
நீங்கள் கூறுவதாகும்
by your mouths
بِأَفْوَٰهِكُمْۖ
உங்கள் வாய்களால்
but Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
says
يَقُولُ
கூறுகின்றான்
the truth
ٱلْحَقَّ
உண்மையை
and He
وَهُوَ
அவன்தான்
guides
يَهْدِى
வழிகாட்டுகின்றான்
(to) the Way
ٱلسَّبِيلَ
நல்ல பாதைக்கு

Maa ja'alal laahu lirajulim min qalbaini fee jawfih; wa maa ja'ala azwaajakumul laaa'ee tuzaahiroona minhunna ummahaatikum; wa maa ja'ala ad'iyaaa'akum abnaaa'akum; zaalikum qawlukum bi afwaa hikum wallaahu yaqoolul haqqa wa Huwa yahdis sabeel (al-ʾAḥzāb 33:4)

Abdul Hameed Baqavi:

எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்களுடைய (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்களுடைய பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே. (அன்றி உண்மையல்ல.) அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.

English Sahih:

Allah has not made for a man two hearts in his interior. And He has not made your wives whom you declare unlawful your mothers. And He has not made your claimed [i.e., adopted] sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allah says the truth, and He guides to the [right] way. ([33] Al-Ahzab : 4)

1 Jan Trust Foundation

எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.