Skip to main content

ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௫

هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ ۚوَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَاۤءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢبِغَيْرِ عِلْمٍ ۚ لِيُدْخِلَ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا  ( الفتح: ٢٥ )

They
هُمُ
அவர்கள்தான்
(are) those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
and hindered you
وَصَدُّوكُمْ
இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
from Al-Masjid Al-Haraam
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
Al-Masjid Al-Haraam
ٱلْحَرَامِ
புனித(மானது)
while the offering
وَٱلْهَدْىَ
பலிப் பிராணியையும்
(was) prevented
مَعْكُوفًا
வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
from reaching
أَن يَبْلُغَ
அது சேருவதை விட்டு
its place (of sacrifice)
مَحِلَّهُۥۚ
அதனுடைய இடத்திற்கு
And if not
وَلَوْلَا
இல்லாமல் இருந்தால்
(for) men
رِجَالٌ
ஆண்களும்
believing
مُّؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
and women
وَنِسَآءٌ
பெண்களும்
believing
مُّؤْمِنَٰتٌ
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
not
لَّمْ
நீங்கள் அறியாமல்
you knew them
تَعْلَمُوهُمْ
நீங்கள் அறியாமல் அவர்களை
that you may trample them
أَن تَطَـُٔوهُمْ
நீங்கள் தாக்கிவிட
and would befall you
فَتُصِيبَكُم
அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
from them any harm
مِّنْهُم مَّعَرَّةٌۢ
அவர்களினால்/பழிப்பு
without knowledge
بِغَيْرِ عِلْمٍۖ
அறியாமல்
That Allah may admit
لِّيُدْخِلَ
நுழைப்பதற்காக
That Allah may admit
ٱللَّهُ
அல்லாஹ்
to His Mercy
فِى رَحْمَتِهِۦ
தனது அருளில்
whom He wills
مَن يَشَآءُۚ
நாடுகின்றவர்களை
If they had been apart
لَوْ تَزَيَّلُوا۟
அவர்கள் நீங்கியிருந்தால்
surely, We would have punished
لَعَذَّبْنَا
தண்டித்திருப்போம்
those who disbelieved
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
among them
مِنْهُمْ
அவர்களில்
(with) a punishment
عَذَابًا
தண்டனையால்
painful
أَلِيمًا
வலி தரக்கூடிய(து)

Humul lazeena kafaroo wa saddookum 'anil-Masjidil-Haraami walhadya ma'koofan any yablugha mahillah; wa law laa rijaalum mu'minoona wa nisaaa'um mu'minaatul lam ta'lamoohum an tata'oohum fatuseebakum minhum ma'arratum bighairi 'ilmin liyud khilal laahu fee rahmatihee many yashaaa'; law tazayyaloo la'azzabnal lazeena kafaroo minhum 'azaaban aleema (al-Fatḥ 48:25)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் வெற்றி கொண்ட) இந்த மக்காவாசிகள்தாம் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜித் (என்னும் கஅபாவு)க்குச் செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ் தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகியிருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வோம்.

English Sahih:

They are the ones who disbelieved and obstructed you from al-Masjid al-Haram while the offering was prevented from reaching its place of sacrifice. And if not for believing men and believing women whom you did not know – that you might trample [i.e., kill] them and there would befall you because of them dishonor without [your] knowledge – [you would have been permitted to enter Makkah]. [This was so] that Allah might admit to His mercy whom He willed. If they had been apart [from them], We would have punished those who disbelieved among them with painful punishment ([48] Al-Fath : 25)

1 Jan Trust Foundation

“மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.