Skip to main content

ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௪

۞ قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ۗ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْٓا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِيْ قُلُوْبِكُمْ ۗوَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـًٔا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ   ( الحجرات: ١٤ )

Say
قَالَتِ
கூறுகின்றனர்
the Bedouins
ٱلْأَعْرَابُ
கிராமத்து அரபிகள்
"We believe"
ءَامَنَّاۖ
நாங்கள் ஈமான் கொண்டோம்
Say
قُل
நீர் கூறுவீராக!
"Not you believe;
لَّمْ تُؤْمِنُوا۟
நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
but
وَلَٰكِن
என்றாலும்
say
قُولُوٓا۟
கூறுங்கள்!
"We have submitted"
أَسْلَمْنَا
நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
and has not yet entered
وَلَمَّا يَدْخُلِ
நுழையவில்லை
the faith
ٱلْإِيمَٰنُ
ஈமான்
in your hearts
فِى قُلُوبِكُمْۖ
உங்கள் உள்ளங்களில்
But if you obey
وَإِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
and His Messenger
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
not He will deprive you
لَا يَلِتْكُم
உங்களுக்கு குறைக்க மாட்டான்
of your deeds
مِّنْ أَعْمَٰلِكُمْ
உங்கள் செயல்களில்
anything
شَيْـًٔاۚ
எதையும்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Qaalatil-A 'raabu aamannaa qul lam tu'minoo wa laakin qoolooo aslamnaa wa lamma yadkhulil eemaanu fee quloobikum wa in tutee'ul laaha wa Rasoolahoo laa yalitkum min a'maalikum shai'aa; innal laaha Ghafoorur Raheem (al-Ḥujurāt 49:14)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின், உங்களுடைய நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்."

English Sahih:

The bedouins say, "We have believed." Say, "You have not [yet] believed; but say [instead], 'We have submitted,' for faith has not yet entered your hearts. And if you obey Allah and His Messenger, He will not deprive you from your deeds of anything. Indeed, Allah is Forgiving and Merciful." ([49] Al-Hujurat : 14)

1 Jan Trust Foundation

“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.