Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௮

وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌۗ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًاۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ  ( الأعراف: ١٤٨ )

And took
وَٱتَّخَذَ
எடுத்துக் கொண்டனர்
(the) people
قَوْمُ
சமுதாயம்
(of) Musa
مُوسَىٰ
மூஸாவுடைய
from after him
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
from their ornaments
مِنْ حُلِيِّهِمْ
தங்கள் நகையிலிருந்து
a calf
عِجْلًا
ஒரு காளைக் கன்றை
an image [for] it
جَسَدًا لَّهُۥ
ஓர் உடலை/அதற்கு
(had) a lowing sound
خُوَارٌۚ
மாட்டின் சப்தம்
Did not they see
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
that it (could) not speak to them
أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ
நிச்சயமாக அது/பேசுவதுமில்லை/அவர்களுடன்
and not guide them
وَلَا يَهْدِيهِمْ
(நேர்)வழி காட்டுவதுமில்லை/அவர்களுக்கு
(to) a way?
سَبِيلًاۘ
பாதையை
They took it (for worship)
ٱتَّخَذُوهُ
எடுத்துக் கொண்டார்கள்/அதை
and they were
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
wrongdoers
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Wattakhaza qawmu Moosaa mim ba'dihee min huliyyihim 'ijlan jasadal lahoo khuwaar; alam yaraw annahoo laa yukallimuhum wa laa yahdeehim sabeelaa; ittakha zoohu wa kaanoo zaalimeen (al-ʾAʿrāf 7:148)

Abdul Hameed Baqavi:

(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள்.

English Sahih:

And the people of Moses made, after [his departure], from their ornaments a calf – an image having a lowing sound. Did they not see that it could neither speak to them nor guide them to a way? They took it [for worship], and they were wrongdoers. ([7] Al-A'raf : 148)

1 Jan Trust Foundation

மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.