Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௩

وَنَزَعْنَا مَا فِيْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْانْهٰرُۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ هَدٰىنَا لِهٰذَاۗ وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَآ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۗ وَنُوْدُوْٓا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ  ( الأعراف: ٤٣ )

And We will remove
وَنَزَعْنَا
நீக்கி விடுவோம்
whatever (is) in their breasts
مَا فِى صُدُورِهِم
எதை/அவர்களுடைய நெஞ்சங்களில்
of malice
مِّنْ غِلٍّ
குரோதத்தை
Flows
تَجْرِى
ஓடும்
from underneath them
مِن تَحْتِهِمُ
அவர்களுக்குக் கீழ்
the rivers
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
And they will say
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
"All the praise
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
(is) for Allah
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
the One Who guided us to this
ٱلَّذِى هَدَىٰنَا لِهَٰذَا
எவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்கு
and not we were to receive guidance
وَمَا كُنَّا لِنَهْتَدِىَ
நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்
if not [that] (had) guided us
لَوْلَآ أَنْ هَدَىٰنَا
நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களை
Allah
ٱللَّهُۖ
அல்லாஹ்
Certainly came
لَقَدْ جَآءَتْ
திட்டமாக/வந்தா(ர்க)ள்
Messengers
رُسُلُ
தூதர்கள்
(of) our Lord
رَبِّنَا
எங்கள் இறைவனின்
with the truth"
بِٱلْحَقِّۖ
உண்மையைக் கொண்டு
And they will be addressed
وَنُودُوٓا۟
இன்னும் அழைக்கப்படுவார்கள்
[that] "This (is) Paradise
أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ
இந்த சொர்க்கம்
you have been made to inherit it
أُورِثْتُمُوهَا
இதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்
for what you used to do"
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்

Wa naza'naa maa fee sudoorihim min ghillin tajree min tahtihimul anhaaru wa qaalul hamdu lillaahil lazee hadaanaa lihaaza wa maa kunna linahtadiya law laaa ann hadaanal laahu laqad jaaa'at Rusulu Rabbinaa bilhaqq; wa noodoo an tilkumul jannnatu ooristumoohaa bimaa kuntum ta'maloon (al-ʾAʿrāf 7:43)

Abdul Hameed Baqavi:

அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் "இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்" என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.

English Sahih:

And We will have removed whatever is within their breasts of resentment, [while] flowing beneath them are rivers. And they will say, "Praise to Allah, who has guided us to this; and we would never have been guided if Allah had not guided us. Certainly the messengers of our Lord had come with the truth." And they will be called, "This is Paradise, which you have been made to inherit for what you used to do." ([7] Al-A'raf : 43)

1 Jan Trust Foundation

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்| “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.