Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௭

اِنَّمَا النَّسِيْۤءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ۗزُيِّنَ لَهُمْ سُوْۤءُ اَعْمَالِهِمْۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ࣖ  ( التوبة: ٣٧ )

Indeed the postponing
إِنَّمَا ٱلنَّسِىٓءُ
பிற்படுத்துவதெல்லாம்
(is) an increase
زِيَادَةٌ
அதிகப்படுத்துவது
in the disbelief
فِى ٱلْكُفْرِۖ
நிராகரிப்பில்
are led astray
يُضَلُّ
வழி கெடுக்கப்படுகின்றனர்
by it
بِهِ
இதன் மூலம்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieve
كَفَرُوا۟
நிராகரித்தனர்
They make it lawful
يُحِلُّونَهُۥ
ஆகுமாக்குகின்றனர்/அதை
one year
عَامًا
ஓர் ஆண்டில்
and make it unlawful
وَيُحَرِّمُونَهُۥ
இன்னும் அதைத் தடை செய்கின்றனர்
(another) year
عَامًا
ஓர் ஆண்டில்
to adjust
لِّيُوَاطِـُٔوا۟
அவர்கள் ஒத்து வருவதற்காக
the number
عِدَّةَ
எண்ணிக்கைக்கு
which Allah has made unlawful
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
Allah has made unlawful
ٱللَّهُ
அல்லாஹ்
and making lawful
فَيُحِلُّوا۟
ஆகுமாக்குவார்கள்
what Allah has made unlawful
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
Allah has made unlawful
ٱللَّهُۚ
அல்லாஹ்
Is made fair-seeming
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டன
to them
لَهُمْ
அவர்களுக்கு
(the) evil
سُوٓءُ
தீய(வை)
(of) their deeds
أَعْمَٰلِهِمْۗ
அவர்களுடைய செயல்கள்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(does) not guide
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
the people
ٱلْقَوْمَ
மக்களை
the disbelievers
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களான

Innamma naseee'u ziyaadatun filkufri yudallu bihillazeena kafaroo yuhil loonahoo 'aamanw wa yuhar rimoonahoo 'aamalliyu watti'oo 'iddata maa harramal laah; zuyyina lahum sooo'u a'maalihim; wallaahu laa yahdil qawmal kaafireen (at-Tawbah 9:37)

Abdul Hameed Baqavi:

(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

English Sahih:

Indeed, the postponing [of restriction within sacred months] is an increase in disbelief by which those who have disbelieved are led [further] astray. They make it lawful one year and unlawful another year to correspond to the number made unlawful by Allah and [thus] make lawful what Allah has made unlawful. Made pleasing to them is the evil of their deeds; and Allah does not guide the disbelieving people. ([9] At-Tawbah : 37)

1 Jan Trust Foundation

(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.