Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௭

۞ قَالُوْٓا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚوَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ  ( يوسف: ٧٧ )

They said
قَالُوٓا۟
கூறினர்
"If he steals
إِن يَسْرِقْ
அவர் திருடினால்
then verily stole
فَقَدْ سَرَقَ
திருடி விட்டான்
a brother
أَخٌ
ஒரு சகோதரன்
of his
لَّهُۥ
அவருடைய
before" before"
مِن قَبْلُۚ
முன்னர்
But Yusuf kept it secret
فَأَسَرَّهَا
மறைத்தார்/அதை
But Yusuf kept it secret
يُوسُفُ
யூஸுஃப்
within himself
فِى نَفْسِهِۦ
தன் உள்ளத்தில்
and (did) not reveal it
وَلَمْ يُبْدِهَا
வெளியாக்கவில்லை/அதை
to them
لَهُمْۚ
அவர்களுக்கு
He said
قَالَ
கூறினார்
"You
أَنتُمْ
நீங்கள்
(are the) worse
شَرٌّ
மிகவும் கெட்டவர்கள்
(in) position
مَّكَانًاۖ
தரம்
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
knows best
أَعْلَمُ
மிக அறிந்தவன்
of what you describe"
بِمَا تَصِفُونَ
நீங்கள் வருணிப்பதை

Qaaloo iny yasriq faqad saraqa akhul lahoo min qabl; fa asarrahaa Yoosufu fee nafsihee wa lam yubdihaa lahum; qaala antum sharrum makaananw wallaahu a'lamu bimaa tasifoon (Yūsuf 12:77)

Abdul Hameed Baqavi:

(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார்.

English Sahih:

They said, "If he steals – a brother of his has stolen before." But Joseph kept it within himself and did not reveal it to them. He said, "You are worse in position, and Allah is most knowing of what you describe." ([12] Yusuf : 77)

1 Jan Trust Foundation

(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.