Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௩௦

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِيْٓ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَآ اُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَهُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِۗ قُلْ هُوَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ   ( الرعد: ٣٠ )

Thus
كَذَٰلِكَ
இவ்வாறே
We have sent you
أَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/உம்மை
to a nation
فِىٓ أُمَّةٍ
ஒரு சமுதாயத்திடம்
verily have passed away
قَدْ خَلَتْ
சென்றிருக்கின்றன
from before it
مِن قَبْلِهَآ
இவர்களுக்கு முன்னரும்
nations
أُمَمٌ
பல சமுதாயங்கள்
so that you might recite
لِّتَتْلُوَا۟
நீர் ஓதுவதற்காக
to them
عَلَيْهِمُ
இவர்கள் முன்
what We revealed
ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
எது/நாம் வஹீ அறிவித்தோம்
to you
إِلَيْكَ
உமக்கு
while they
وَهُمْ
இவர்களோ
disbelieve
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனர்
in the Most Gracious
بِٱلرَّحْمَٰنِۚ
ரஹ்மானை
Say
قُلْ
கூறுவீராக
"He
هُوَ
அவன்தான்
(is) my Lord
رَبِّى
என் இறைவன்
(there is) no
لَآ
அறவே இல்லை
god
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
except
إِلَّا
தவிர
Him
هُوَ
அவனை
Upon Him
عَلَيْهِ
அவன் மீது
I put my trust
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்தேன்
and to Him
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
(is) my return"
مَتَابِ
என் பாவ மீட்சி

Kazaalika arsalnaaka feee ummatin qad khalat min qablihaaa umamul litatluwa 'alaihimul lazeee awhainaaa ilaika wa hum yakfuroona bir Rahmaaan; qul Huwa Rabbee laaa ilaaha illaa Huwa Rabbee laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkaltu wa ilaihi mataab (ar-Raʿd 13:30)

Abdul Hameed Baqavi:

(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்."

English Sahih:

Thus have We sent you to a community before which [other] communities have passed on so you might recite to them that which We revealed to you, while they disbelieve in the Most Merciful. Say, "He is my Lord; there is no deity except Him. Upon Him I rely, and to Him is my return." ([13] Ar-Ra'd : 30)

1 Jan Trust Foundation

(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்| “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!