Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௯

وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْۗ فَمَنْ شَاۤءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَاۤءَ فَلْيَكْفُرْۚ اِنَّآ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًاۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاۗ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَاۤءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَۗ بِئْسَ الشَّرَابُۗ وَسَاۤءَتْ مُرْتَفَقًا  ( الكهف: ٢٩ )

And say
وَقُلِ
இன்னும் கூறுவீராக
"The truth
ٱلْحَقُّ
உண்மை
(is) from your Lord
مِن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
so whoever wills -
فَمَن شَآءَ
எவர்/விரும்பினார்
let him believe
فَلْيُؤْمِن
நம்பிக்கை கொள்ளலாம்
and whoever
وَمَن
இன்னும் எவர்
wills -
شَآءَ
விரும்பினார்
let him disbelieve"
فَلْيَكْفُرْۚ
நிராகரித்து விடலாம்
Indeed We
إِنَّآ
நிச்சயமாக நாம்
have prepared
أَعْتَدْنَا
ஏற்படுத்தியுள்ளோம்
for the wrongdoers
لِلظَّٰلِمِينَ
தீயவர்களுக்கு
a Fire
نَارًا
நரக நெருப்பை
will surround
أَحَاطَ
சூழ்ந்துள்ளது
them
بِهِمْ
அவர்களை
its walls
سُرَادِقُهَاۚ
அதன் சுவர்
And if they call for relief
وَإِن يَسْتَغِيثُوا۟
அவர்கள் உதவி தேடினால்
they will be relieved
يُغَاثُوا۟
உதவப்படுவார்கள்
with water
بِمَآءٍ
நீரைக் கொண்டு
like molten brass
كَٱلْمُهْلِ
முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற
(which) scalds
يَشْوِى
பொசுக்கக் கூடியது
the faces
ٱلْوُجُوهَۚ
முகங்களை
Wretched
بِئْسَ
மகா கெட்டது
(is) the drink
ٱلشَّرَابُ
பானம்
and evil
وَسَآءَتْ
இன்னும் அது தீயது
(is) the resting place
مُرْتَفَقًا
ஓய்விடம்

Wa qulil haqqu mir Rabbikum faman shaaa'a falyu minw wa man shaaa'a falyakfur; innaaa a'tadnaa lizzaalimeena Naaran ahaata bihim suraadiquhaa; wa iny yastagheesoo yaghaasoo bimaaa'in kalmuhli yashwil wujooh' bi'sash-sharaab; wa saaa'at murtafaqaa (al-Kahf 18:29)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.

English Sahih:

And say, "The truth is from your Lord, so whoever wills – let him believe; and whoever wills – let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place. ([18] Al-Kahf : 29)

1 Jan Trust Foundation

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக| “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.