Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௩

۞ وَاذْكُرُوا اللّٰهَ فِيْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ ۗ فَمَنْ تَعَجَّلَ فِيْ يَوْمَيْنِ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۚوَمَنْ تَاَخَّرَ فَلَآ اِثْمَ عَلَيْهِۙ لِمَنِ اتَّقٰىۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ   ( البقرة: ٢٠٣ )

And remember
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
during days
فِىٓ أَيَّامٍ
நாள்களில்
numbered
مَّعْدُودَٰتٍۚ
எண்ணப்பட்டவை
Then (he) who
فَمَن
இன்னும் எவர்
hurries
تَعَجَّلَ
அவசரப்பட்டார்
in two days
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
then no sin
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
upon him
عَلَيْهِ
அவர் மீது
and whoever delays
وَمَن تَأَخَّرَ
இன்னும் எவர்/தாமதித்தார்
then no sin
فَلَآ إِثْمَ
அறவே பாவமில்லை
upon him
عَلَيْهِۚ
அவர் மீது
for (the one) who
لِمَنِ
எவருக்கு
fears
ٱتَّقَىٰۗ
அஞ்சினார்
And fear
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
and know
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
that you
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
unto Him
إِلَيْهِ
அவனிடமே
will be gathered
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Wazkurul laaha feee ayyaamim ma'doodaat; faman ta'ajjala fee yawmaini falaaa ismaa 'alaihi wa man taakhkhara falaaa isma 'alayh; limanit-taqaa; wattaqul laaha wa'lamooo annakum ilaihi tuhsharoon (al-Baq̈arah 2:203)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.

English Sahih:

And remember Allah during [specific] numbered days. Then whoever hastens [his departure] in two days – there is no sin upon him; and whoever delays [until the third] – there is no sin upon him – for him who fears Allah. And fear Allah and know that unto Him you will be gathered. ([2] Al-Baqarah : 203)

1 Jan Trust Foundation

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.