Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௦

فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۗ وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىۗ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۗ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ   ( البقرة: ٢٢٠ )

Concerning the world
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
and the Hereafter
وَٱلْءَاخِرَةِۗ
இன்னும் மறுமை
They ask you
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
about the orphans
عَنِ ٱلْيَتَٰمَىٰۖ
அநாதைகள் பற்றி
Say
قُلْ
கூறுவீராக
"Setting right (their affairs)
إِصْلَاحٌ
சீர்திருத்துவது
for them
لَّهُمْ
அவர்களை
(is) best
خَيْرٌۖ
மிக நன்றே
And if you associate with them
وَإِن تُخَالِطُوهُمْ
இன்னும் நீங்கள் சேர்த்துக் கொண்டால்/அவர்களை
then they (are) your brothers
فَإِخْوَٰنُكُمْۚ
உங்கள் சகோதரர்கள்
And Allah
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
knows
يَعْلَمُ
அறிவான்
the corrupter
ٱلْمُفْسِدَ
சீர்கெடுப்பவனை
from
مِنَ
இருந்து
the amender
ٱلْمُصْلِحِۚ
சீர்செய்பவன்
And if (had) willed
وَلَوْ شَآءَ
(அவன்) நாடினால்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
surely He (could have) put you in difficulties
لَأَعْنَتَكُمْۚ
சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) All-Mighty
عَزِيزٌ
மிகைத்தவன்
All-Wise"
حَكِيمٌ
ஞானவான்

Fid dunyaa wal aakhirah; wa yas'aloonaka 'anil yataamaa qul islaahullahum khayr, wa in tukhaalitoohum fa ikhwaanukum; wallaahu ya'lamul mufsida minalmuslih; wa law shaaa'al laahu la-a'natakum; innal laaha 'Azeezun Hakeem (al-Baq̈arah 2:220)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)

English Sahih:

To this world and the Hereafter. And they ask you about orphans. Say, "Improvement for them is best. And if you mix your affairs with theirs – they are your brothers. And Allah knows the corrupter from the amender. And if Allah had willed, He could have put you in difficulty. Indeed, Allah is Exalted in Might and Wise." ([2] Al-Baqarah : 220)

1 Jan Trust Foundation

(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக| “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”