Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௪௫

قُلْ اِنَّمَآ اُنْذِرُكُمْ بِالْوَحْيِۖ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَاۤءَ اِذَا مَا يُنْذَرُوْنَ   ( الأنبياء: ٤٥ )

Say
قُلْ
கூறுவீராக
"Only
إِنَّمَآ
எச்சரிப்பதெல்லாம்
I warn you
أُنذِرُكُم
எச்சரிப்பதெல்லாம் உங்களை
by the revelation"
بِٱلْوَحْىِۚ
வஹீ ன் மூலமாகத்தான்
But not hear
وَلَا يَسْمَعُ
செவிசாய்க்க மாட்டார்கள்
the deaf
ٱلصُّمُّ
செவிடர்கள்
the call
ٱلدُّعَآءَ
அழைப்புக்கு
when
إِذَا
போது
when they are warned
مَا يُنذَرُونَ
எச்சரிக்கப்படும்

Qul innamaaa unzirukum bilwahyi; wa laa yasma'us summud du'aaa'a izaa maa yunzaroon (al-ʾAnbiyāʾ 21:45)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி "வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவைகளையே! (நான் சுயமாக ஒன்றும் கூறவில்லை)" என்று நீங்கள் கூறுங்கள். (எனினும், இவர்கள் செவிடர்களைப்போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தால் அதனை அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள்.

English Sahih:

Say, "I only warn you by revelation." But the deaf do not hear the call when they are warned. ([21] Al-Anbya : 45)

1 Jan Trust Foundation

“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.