Skip to main content
bismillah

ٱقْتَرَبَ
நெருங்கிவிட்டது
لِلنَّاسِ
மக்களுக்கு
حِسَابُهُمْ
அவர்களின் விசாரணை
وَهُمْ
அவர்களோ
فِى غَفْلَةٍ
அலட்சியத்தில்
مُّعْرِضُونَ
புறக்கணிக்கின்றனர்

Iqtaraba linnaasi hisaa buhum wa hum fee ghaflatim mu'ridoon

மனிதர்களை (நாம்) கேள்வி கணக்கு(க் கேட்கும் நாள்) நெருங்கிக் கொண்டே வருகின்றது; எனினும், அவர்களோ அதனைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.

Tafseer

مَا يَأْتِيهِم
அவர்களுக்கு வராது
مِّن ذِكْرٍ
அறிவுரை ஏதும்
مِّن رَّبِّهِم
அவர்களுடைய இறைவனிடமிருந்து
مُّحْدَثٍ
புதிய
إِلَّا
தவிர
ٱسْتَمَعُوهُ
அதை அவர்கள் செவிமடுத்தே
وَهُمْ
அவர்கள்
يَلْعَبُونَ
விளையாடுபவர்களாக

Maa yaateehim min zikrim mir Rabbihim muhdasin illas tama'oohu wa hum yal'aboon

தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக யாதொரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதனை அவர்கள் (நம்பாது) பரிகாசம் செய்துகொண்டே கேட்கின்றார்கள்.

Tafseer

لَاهِيَةً
அலட்சியம் செய்கின்றன
قُلُوبُهُمْۗ
அவர்களது உள்ளங்கள்
وَأَسَرُّوا۟
பகிரங்கப்படுத்திக் கொண்டனர்
ٱلنَّجْوَى
பேச்சை
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
هَلْ هَٰذَآ
இவர் இல்லை
إِلَّا بَشَرٌ
மனிதரே தவிர
مِّثْلُكُمْۖ
உங்களைப் போன்ற
أَفَتَأْتُونَ
ஏற்றுக்கொள்கிறீர்களா
ٱلسِّحْرَ
சூனியத்தை
وَأَنتُمْ
நீங்கள்
تُبْصِرُونَ
அறிந்துகொண்டே

Laahiyatan quloobuhum; wa asarrun najwal lazeena zalamoo hal haazaa illaa basharum mislukum afataa toonas sihra wa antum tubsiroon

அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. அன்றி, இத்தகைய அநியாயக்காரர்கள் (நம்முடைய தூதரைப் பற்றி) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீங்கள் பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகின்றீர்களா?" என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّى
என் இறைவன்
يَعْلَمُ
அறிகிறான்
ٱلْقَوْلَ
பேச்சுகளை
فِى ٱلسَّمَآءِ
வானத்திலும்
وَٱلْأَرْضِۖ
பூமியிலும்
وَهُوَ ٱلسَّمِيعُ
அவன்தான் நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கு அறிபவன்

Qaala Rabbee ya'lamul qawla fis samaaa'i wal ardi wa Huwas Samee'ul Aleem

"வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படை யாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்" என்று (நமது தூதர்) பதில் கூறினார்.

Tafseer

بَلْ
மாறாக
قَالُوٓا۟
கூறினர்
أَضْغَٰثُ
பயமுறுத்துகின்ற
أَحْلَٰمٍۭ
கனவுகள்
بَلِ
மாறாக
ٱفْتَرَىٰهُ
இதை இட்டுக்கட்டுகிறார்
بَلْ
மாறாக
هُوَ
இவர்
شَاعِرٌ
ஒரு கவிஞர்
فَلْيَأْتِنَا
ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
كَمَآ
போன்று
أُرْسِلَ
அனுப்பப்பட்டது
ٱلْأَوَّلُونَ
முந்தியவர்கள்

Bal qaalooo adghaasu ahlaamim balif taraahu bal huwa shaa'irun falyaatinaa bi Aayatin kamaa ursilal awwaloon

(தவிர, அவர்கள் நம்முடைய வசனங்களைப் பற்றி) "இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்கள்) என்றும், நம்முடைய தூதர் இதனைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் வந்த தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்!

Tafseer

مَآ ءَامَنَتْ
நம்பிக்கை கொள்ளவில்லை
قَبْلَهُم
இவர்களுக்கு முன்னர்
مِّن قَرْيَةٍ
எந்த சமுதாயமும்
أَهْلَكْنَٰهَآۖ
ஆகவே, அவர்களை அழித்தோம்
أَفَهُمْ
?/எனவே, இவர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டு விடுவார்கள்

Maaa aaamanat qablahum min qaryatin ahlaknaahaa a-fahum yu'minoon

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்கள்தாமா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
قَبْلَكَ
உமக்கு முன்னர்
إِلَّا
தவிர
رِجَالًا
ஆடவர்களை
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
إِلَيْهِمْۖ
அவர்களுக்கு
فَسْـَٔلُوٓا۟
ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்
أَهْلَ ٱلذِّكْرِ
வேதத்தையுடையவர்களிடம்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக

Wa maaa arsalnaa qablaka illaa rijaalan nooheee ilaihim fas'aloo ahlaz zikri in kuntum laa ta'lamoon

(நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَمَا جَعَلْنَٰهُمْ
நாம் அவர்களை ஆக்கவில்லை
جَسَدًا
உடல்களாக
لَّا يَأْكُلُونَ
சாப்பிடாத
ٱلطَّعَامَ
உணவு
وَمَا كَانُوا۟
இன்னும் இருக்கவில்லை
خَٰلِدِينَ
நிரந்தர தன்மை உள்ளவர்களாக

Wa maa ja'alnaahum jasadal laa yaakuloonat ta'aama wa maa kaanoo khaalideen

அன்றி, அவர்களுக்கு நாம் உணவே உட்கொள்ளாத உடலைக் கொடுக்கவில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.

Tafseer

ثُمَّ
பிறகு
صَدَقْنَٰهُمُ
நாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம்
ٱلْوَعْدَ
வாக்கை
فَأَنجَيْنَٰهُمْ
நாம் பாதுகாத்தோம்
وَمَن نَّشَآءُ
நாம் நாடியவர்களையும்
وَأَهْلَكْنَا
நாம் அழித்தோம்
ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறியவர்களை

summa sadaqnaa humul wa'da fa-anjainaahum wa man nashaaa'u wa ahlaknal musrifeen

பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.

Tafseer

لَقَدْ
திட்டமாக
أَنزَلْنَآ
இறக்கி இருக்கிறோம்
إِلَيْكُمْ
உங்களுக்கு
كِتَٰبًا
ஒரு வேதத்தை
فِيهِ ذِكْرُكُمْۖ
அதில்/உங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறது
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Laqad anzalnaaa ilaikum Kitaaban feehi zikrukum afalaa ta'qiloon

உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அன்பியா
القرآن الكريم:الأنبياء
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Anbiya'
ஸூரா:21
வசனம்:112
Total Words:1168
Total Characters:4890
Number of Rukūʿs:7
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:73
Starting from verse:2483