Skip to main content

وَكَمْ
எத்தனையோ
قَصَمْنَا
நாம் அழித்தோம்
مِن قَرْيَةٍ
பல ஊர்களை
كَانَتْ
அவை இருந்தன
ظَالِمَةً
தீயவையாக
وَأَنشَأْنَا
உருவாக்கினோம்
بَعْدَهَا
அவற்றுக்குப் பின்னர்
قَوْمًا ءَاخَرِينَ
வேறு மக்களை

Wa kam qasamnaa min qaryatin kannat zaalimatanw wa anshadnaa ba'dahaa qawman aakhareen

அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.

Tafseer

فَلَمَّآ أَحَسُّوا۟
அவர்கள் உணர்ந்தபோது
بَأْسَنَآ
நமது வேதனையை
إِذَا هُم
அப்போது அவர்கள்
مِّنْهَا
அதிலிருந்து
يَرْكُضُونَ
விரைந்து ஓடினர்

Falammaaa ahassoo baasanaaa izaaa hum minhaa yarkudoon

அவர்களும் நம்முடைய வேதனையின் அறிகுறியை உணர்ந்துகொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு ஓட ஆரம்பித்தார்கள்.

Tafseer

لَا تَرْكُضُوا۟
விரைந்து ஓடாதீர்கள்
وَٱرْجِعُوٓا۟
திரும்புங்கள்
إِلَىٰ مَآ
எதன் பக்கம்
أُتْرِفْتُمْ
நீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள்
فِيهِ
அதில்
وَمَسَٰكِنِكُمْ
உங்கள் இல்லங்களின்
لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ
நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்

Laa tarkudoo warji'ooo ilaa maaa utriftum feehe wa masaakinikum la'allakum tus'aloon

(அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) "நீங்கள் ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அதுபற்றி கேட்கப்படுவீர்கள்" (என்று கூறினோம்.)

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
يَٰوَيْلَنَآ
எங்கள் நாசமே
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Qaaloo yaa wailanaaa innaa kunnaa zaalimeen

அதற்கவர்கள் "எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (பாவிகளாகி) விட்டோம்" என்று கூக்குரலிட்டார்கள்.

Tafseer

فَمَا زَالَت
நீடித்திருந்தது
تِّلْكَ
அதுவே
دَعْوَىٰهُمْ
அவர்களது கூப்பாடாக
حَتَّىٰ
இறுதியாக
جَعَلْنَٰهُمْ
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
حَصِيدًا
வெட்டப்பட்டவர்களாக
خَٰمِدِينَ
அழிந்தவர்களாக

Famaa zaalat tilka da'waahum hattaa ja'alnaahum haseedan khaamideen

அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரையில் நீங்காதிருந்தது.

Tafseer

وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
ٱلسَّمَآءَ
வானத்தையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
لَٰعِبِينَ
விளையாடுபவர்களாக

Wa maa khalaqnas samaaa'a wal arda wa maa bainahumaa laa'ibeen

வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

Tafseer

لَوْ أَرَدْنَآ
நாம் நாடி இருந்தால்
أَن نَّتَّخِذَ
நாம் ஏற்படுத்திக் கொள்ள
لَهْوًا
வேடிக்கையை
لَّٱتَّخَذْنَٰهُ
அதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்
مِن لَّدُنَّآ
நம்மிடமிருந்தே
إِن كُنَّا
நாம் இல்லை
فَٰعِلِينَ
செய்பவர்களாக

Law aradnaaa an nattakhiza lahwal lat takhaznaahu mil ladunnaaa in kunnaa faa'ileen

நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.

Tafseer

بَلْ
மாறாக
نَقْذِفُ
எறிகிறோம்
بِٱلْحَقِّ
சத்தியத்தை
عَلَى ٱلْبَٰطِلِ
அசத்தியத்தின் மீது
فَيَدْمَغُهُۥ
அது அதை உடைத்து விடுகிறது
فَإِذَا
அப்போது
هُوَ
அது
زَاهِقٌۚ
அழிந்து விடுகிறது
وَلَكُمُ
உங்களுக்கு
ٱلْوَيْلُ
நாசம்தான்
مِمَّا تَصِفُونَ
வர்ணிப்பதால்

Bal naqzifu bilhaqqi 'alal baatili fa yadmaghuhoo fa izaa huwa zaahiq; wa lakumul wailu mimmaa tasifoon

அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை) உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.

Tafseer

وَلَهُۥ
அவனுக்கே
مَن
எவர்கள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
وَمَنْ
இன்னும் எவர்கள்
عِندَهُۥ
அவனிடம்
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிக்க மாட்டார்கள்
عَنْ عِبَادَتِهِۦ
அவனை வணங்குவதைவிட்டு
وَلَا يَسْتَحْسِرُونَ
இன்னும் சோர்வடைய மாட்டார்கள்

Wa lahoo man fis samaawaati wal ard; wa man 'indahoo laa yastakbiroona 'an 'ibaada tihee wa laa yastahsiroon

வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவும் அவனுக்குரியனவே! அவனுடைய சந்நிதியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவும் சோர்வுறவும் மாட்டார்கள்.

Tafseer

يُسَبِّحُونَ
அவர்கள் துதிக்கின்றனர்
ٱلَّيْلَ
இரவு
وَٱلنَّهَارَ
பகலாக
لَا يَفْتُرُونَ
பலவீனப்படுவதில்லை

Yusabbihoona laila wannahaara laa yafturoon

அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர்.

Tafseer