Skip to main content

وَلَقَدِ ٱسْتُهْزِئَ
பரிகசிக்கப்பட்டுள்ளது
بِرُسُلٍ
பல தூதர்களை
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فَحَاقَ
வந்து இறங்கியது
بِٱلَّذِينَ سَخِرُوا۟
ஏளனம் செய்தவர்களை
مِنْهُم
அவர்களில்
مَّا
எது
كَانُوا۟
இருந்தார்களோ
بِهِۦ
அதை
يَسْتَهْزِءُونَ
பரிகசித்தார்கள்

Wa laqadis tuhzi'a bi-Rusulim min qablika fahaaqa billazeena sakhiroo minhum maa kaanoo bihee yastahzi'oon

உங்களுக்கு முன்னர் வந்த நம்முடைய தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்த அந்த வேதனை அவர்களை வந்து சூழ்ந்து கொண்டது.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்
يَكْلَؤُكُم
பாதுகாப்பவர் உங்களை
بِٱلَّيْلِ
இரவிலும்
وَٱلنَّهَارِ
பகலிலும்
مِنَ ٱلرَّحْمَٰنِۗ
ரஹ்மானிடமிருந்து
بَلْ
மாறாக
هُمْ
அவர்கள்
عَن ذِكْرِ
அறிவுரையை
رَبِّهِم
தங்கள் இறைவனின்
مُّعْرِضُونَ
புறக்கணிக்கிறார்கள்

Qul mai yakla 'ukum billaili wannahaari minar Rahmaan; bal hum 'an zikri Rabbihim mu'ridoon

(நபியே! இவர்களை நோக்கி) "இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையிலிந்து உங்களை பாதுகாப்பவர் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

Tafseer

أَمْ لَهُمْ
அவர்களுக்கு உண்டா
ءَالِهَةٌ
கடவுள்கள்
تَمْنَعُهُم
பாதுகாக்கின்ற/ அவர்களை
مِّن دُونِنَاۚ
நம்மை அன்றி
لَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
نَصْرَ
உதவுவதற்கே
أَنفُسِهِمْ
தங்களுக்கு
وَلَا
இன்னும்
هُم
அவர்கள்
مِّنَّا
நம்மிடமிருந்து
يُصْحَبُونَ
பாதுகாக்கப்பட மாட்டார்கள்

Am lahum aalihatun tamna'ulum min dooninaa; laa yastatee'oona nasra anfusihim wa laa hum minnna yus-haboon

இவர்களை (நம்முடைய வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மையன்றி இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வமெனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை அவர்களுக்குத் துணைபுரியாது.

Tafseer

بَلْ
மாறாக
مَتَّعْنَا
சுகமளித்தோம்
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு
وَءَابَآءَهُمْ
இன்னும் மூதாதைகளுக்கு இவர்களின்
حَتَّىٰ
இறுதியாக
طَالَ
நீண்டது
عَلَيْهِمُ
இவர்களுக்கு
ٱلْعُمُرُۗ
வாழ்க்கை
أَفَلَا يَرَوْنَ
அவர்கள் பார்க்கவில்லையா
أَنَّا
நிச்சயமாக நாம்
نَأْتِى
வருகிறோம்
ٱلْأَرْضَ
பூமியை
نَنقُصُهَا
அதை அழிக்கிறோம்
مِنْ أَطْرَافِهَآۚ
அதன் சுற்றுப்புறங்களிலிருந்து
أَفَهُمُ
ஆகவே, இவர்கள்
ٱلْغَٰلِبُونَ
மிகைத்து விடுவார்களா

Bal matta'naa haaa'ulaaa'i wa aabaaa'ahum hattaa taala 'alaihimul 'umur; afalaa yarawna anna naatil arda nanqusuhaa min atraafihaa; afahumul ghaaliboon

இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (அவர்கள் கர்வம்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழவும் உள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா நம்மை வெல்வார்கள்?

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنَّمَآ
எச்சரிப்பதெல்லாம்
أُنذِرُكُم
எச்சரிப்பதெல்லாம் உங்களை
بِٱلْوَحْىِۚ
வஹீ ன் மூலமாகத்தான்
وَلَا يَسْمَعُ
செவிசாய்க்க மாட்டார்கள்
ٱلصُّمُّ
செவிடர்கள்
ٱلدُّعَآءَ
அழைப்புக்கு
إِذَا
போது
مَا يُنذَرُونَ
எச்சரிக்கப்படும்

Qul innamaaa unzirukum bilwahyi; wa laa yasma'us summud du'aaa'a izaa maa yunzaroon

(நபியே! அவர்களை நோக்கி "வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவைகளையே! (நான் சுயமாக ஒன்றும் கூறவில்லை)" என்று நீங்கள் கூறுங்கள். (எனினும், இவர்கள் செவிடர்களைப்போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தால் அதனை அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள்.

Tafseer

وَلَئِن
مَّسَّتْهُمْ
அவர்களை அடைந்தால்
نَفْحَةٌ
ஒரு பகுதி
مِّنْ عَذَابِ
தண்டனையிலிருந்து
رَبِّكَ
உமது இறைவனின்
لَيَقُولُنَّ
நிச்சயமாக கூறுவார்கள்
يَٰوَيْلَنَآ
எங்கள் நாசமே
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Wa la'im massat hum nafhatum min 'azaabi Rabbika la yaqoolunna yaawailanaaa innnaa kunnaa zaalimeen

உங்கள் இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் "நாங்கள் கெட்டோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!" என்று கூச்சல் இடுவார்கள்.

Tafseer

وَنَضَعُ
நாம் வைப்போம்
ٱلْمَوَٰزِينَ
தராசுகளை
ٱلْقِسْطَ
நீதமான
لِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فَلَا تُظْلَمُ
அநீதி இழைக்கப்படாது
نَفْسٌ
ஓர் ஆன்மாவுக்கு
شَيْـًٔاۖ
அறவே
وَإِن كَانَ
இருந்தாலும்
مِثْقَالَ
அளவு
حَبَّةٍ
விதை
مِّنْ خَرْدَلٍ
கடுகின்
أَتَيْنَا بِهَاۗ
அதை நாம் கொண்டு வருவோம்
وَكَفَىٰ بِنَا
நாமே போதுமானவர்கள்
حَٰسِبِينَ
விசாரிப்பவர்களாக

Wa nada'ul mawaazeenal qista li Yawmil Qiyaamati falaa tuzlamu nafsun shai'aa; wa in kaana misqaala habbatim min khardalin atainaa bihaa; wa kafaa binaa haasibeen

மறுமை நாளில் சரியான தராசையே நாம் நாட்டுவோம். யாதொரு ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் (நிறுக்க) அதனையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَىٰ
மூஸா
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனுக்கு
ٱلْفُرْقَانَ
பிரித்தறிவிக்கக்கூடிய
وَضِيَآءً
வெளிச்சத்தை
وَذِكْرًا
ஓர் அறிவுரையை
لِّلْمُتَّقِينَ
இறையச்ச முள்ளவர்களுக்குரிய

Wa laqad aatainaa Moosa wa haaroonal Furqaana wa diyaa'anw wa zikral lilmuttaqeen

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக் கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அது பிரகாசமாகவும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَخْشَوْنَ
பயப்படுவார்கள்
رَبَّهُم
தங்கள் இறைவனை
بِٱلْغَيْبِ
மறைவில்
وَهُم
இன்னும் அவர்கள்
مِّنَ ٱلسَّاعَةِ
மறுமையைப் பற்றி
مُشْفِقُونَ
அஞ்சுவார்கள்

Allazeena yakhshawna Rabbahum bilghaibi wa hum minas Saa'ati mushfiqoon

(இறை அச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும்) பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

وَهَٰذَا
இது
ذِكْرٌ
அறிவுரையாகும்
مُّبَارَكٌ
அருள்மிகுந்த
أَنزَلْنَٰهُۚ
இதை இறக்கினோம்
أَفَأَنتُمْ
?/நீங்கள்
لَهُۥ
இதை
مُنكِرُونَ
மறுக்கின்றீர்கள்

Wa haazaa Zikrum Mubaarakun anzalnaah; afa antum lahoo munkiroon

இந்தக் குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இதனை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா?

Tafseer