Skip to main content

أَمِ ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டார்களா?
ءَالِهَةً
கடவுள்களை
مِّنَ ٱلْأَرْضِ
பூமியில்
هُمْ
அவர்கள்
يُنشِرُونَ
உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை

Amit takhazooo aalihatam minal ardi hum yunshiroon

பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?

Tafseer

لَوْ كَانَ
இருந்திருந்தால்
فِيهِمَآ
அவை இரண்டிலும்
ءَالِهَةٌ
கடவுள்கள்
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
لَفَسَدَتَاۚ
அவை இரண்டும் சீரழிந்து இருக்கும்
فَسُبْحَٰنَ
மகாத் தூயவன்
ٱللَّهِ
அல்லாஹ்
رَبِّ
அதிபதியான
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
عَمَّا
விட்டு
يَصِفُونَ
அவர்கள் வர்ணிப்பதை

Law kaana feehimaaa aalihatun illal laahu lafasadataa; fa-Subhaanal laahi Rabbil 'Arshi 'ammaa yasifoon

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.

Tafseer

لَا يُسْـَٔلُ
அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்
عَمَّا
பற்றி
يَفْعَلُ
அவன் செய்வதை
وَهُمْ
அவர்கள்தான்
يُسْـَٔلُونَ
கேள்வி கேட்கப்படுவார்கள்

Laa yus'alu 'ammaa yaf'alu wa hum yus'aloon

அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன்.

Tafseer

أَمِ ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ءَالِهَةًۖ
கடவுள்களை
قُلْ
கூறுவீராக
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
بُرْهَٰنَكُمْۖ
உங்கள் ஆதாரத்தை
هَٰذَا
இது
ذِكْرُ
பேச்சாகும்
مَن مَّعِىَ
என்னுடன் உள்ளவர்களைப் பற்றி
وَذِكْرُ
இன்னும் பேச்சாகும்
مَن قَبْلِىۗ
எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றி
بَلْ
மாறாக
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
ٱلْحَقَّۖ
சத்தியத்தை
فَهُم
ஆகவே, அவர்கள்
مُّعْرِضُونَ
புறக்கணிக்கிறார்கள்

Amit takhazoo min doonihee aalihatan qul haatoo burhaanakum haaza zikru mam ma'iya wa zikru man qablee; bal aksaruhum laa ya'lamoonal haqqa fahum mu'ridoon

(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளைத் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) "என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்துகொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
مِن رَّسُولٍ
எந்த தூதரையும்
إِلَّا
தவிர
نُوحِىٓ
நாம் வஹீ அறிவித்தே(£ம்)
إِلَيْهِ
அவர்களுக்கு
أَنَّهُۥ
நிச்சயமாக விஷயமாவது
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّآ أَنَا۠
என்னைத் தவிர
فَٱعْبُدُونِ
ஆகவே, என்னையே வணங்குங்கள்

Wa maaa arsalnaa min qablika mir Rasoolin illaa nooheee ilaihi annahoo laaa ilaaha illaaa Ana fa'budoon

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் "நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவனில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
وَلَدًاۗ
ஒரு குழந்தையை
سُبْحَٰنَهُۥۚ
அவன் மகா தூயவன்
بَلْ
மாறாக
عِبَادٌ
அடியார்கள்
مُّكْرَمُونَ
அவனுடைய கண்ணியமான

Wa qaalut takhazar Rahmaanu waladan Subhaanah; bal 'ibaadum mkkramoon

(அவ்வாறிருந்தும்) இவர்கள் ரஹ்மான் (மலக்குகளை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (மலக்குகள் அவனுடைய சந்ததிகளன்று, எனினும், அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.

Tafseer

لَا يَسْبِقُونَهُۥ
அவர்கள் அவனை முந்தமாட்டார்கள்
بِٱلْقَوْلِ
பேச்சில்
وَهُم
அவர்கள்
بِأَمْرِهِۦ
அவனுடைய கட்டளைக் கொண்டே
يَعْمَلُونَ
செய்கின்றனர்

Laa yasbiqoonahoo bil qawli wa hum bi amrihee ya'maloon

(அவன் சந்நிதியில்) இ(வ்வான)வர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا بَيْنَ
அவர்களுக்கு முன் உள்ளதையும்
وَمَا خَلْفَهُمْ
அவர்களுக்குப் பின் உள்ளதையும்
وَلَا يَشْفَعُونَ
அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்
إِلَّا
தவிர
لِمَنِ ٱرْتَضَىٰ
அவன் விரும்பியவர்களுக்கே
وَهُم
அவர்கள்
مِّنْ خَشْيَتِهِۦ
அவனுடைய அச்சத்தால்
مُشْفِقُونَ
பயப்படுகிறார்கள்

Ya'lamu maa baina aideehim wa maa khalfahum wa laa yashfa'oona illaa limanir tadaa wa hum min khash yatihee mushfiqoon

அவர்களுக்கு முன்னிருப்பவைகளையும், பின்னிருப்ப லிவைகளையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர் லிகளுக்கன்றி மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.

Tafseer

وَمَن يَقُلْ
யார் கூறுவாரோ
مِنْهُمْ
அவர்களில்
إِنِّىٓ
நிச்சயமாக நான்தான்
إِلَٰهٌ
கடவுள்
مِّن دُونِهِۦ
அவனையன்றி
فَذَٰلِكَ
அவர்
نَجْزِيهِ
அவருக்கு கூலியாக கொடுப்போம்
جَهَنَّمَۚ
நரகத்தையே
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு

Wa mai yaqul minhum inneee ilaahum min doonihee fazaalika najzeehi Jahannam; kazaalika najziz zaalimeen

அவர்களில் எவரேனும் "அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஒரு வணக்கத்திற்குரிய இறைவன்தான்" என்று (அந்த மலக்குகள்) கூறினால், அவர்களுக்கும் நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுக்கும் அவ்வாறே (அவர்களுக்கும் கூலி) கொடுப்போம்.

Tafseer

أَوَلَمْ يَرَ
அவர்கள் அறியவேண்டாமா
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களும்
وَٱلْأَرْضَ
பூமியும்
كَانَتَا
அவ்விரண்டும் இருந்தன
رَتْقًا
சேர்ந்து
فَفَتَقْنَٰهُمَاۖ
நாம்தான் அவற்றைப் பிளந்தோம்
وَجَعَلْنَا
ஏற்படுத்தினோம்
مِنَ ٱلْمَآءِ
தண்ணீரிலிருந்து
كُلَّ شَىْءٍ
எல்லாவஸ்துகளையும்
حَىٍّۖ
உயிருள்ள
أَفَلَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா

Awalam yaral lazeena kafarooo annas samaawaati wal arda kaanataa ratqan faftaqnaahumaa wa ja'alnaa minal maaa'i kulla shai'in haiyin afalaa yu'minoon

(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்த்தேனும் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?

Tafseer