Skip to main content

قَالُوا۟
அவர்கள் கூறினர்
فَأْتُوا۟
கொண்டு வாருங்கள்
بِهِۦ
அவரை
عَلَىٰٓ أَعْيُنِ
கண்களுக்கு முன்
ٱلنَّاسِ
மக்களின்
لَعَلَّهُمْ يَشْهَدُونَ
அவர்கள் பார்ப்பதற்காக

Qaaloo faatoo bihee 'alaaa a'yunin naasi la'allahum yash hadoon

அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
ءَأَنتَ
நீர்தான்
فَعَلْتَ
செய்தீரா
هَٰذَا
இதை
بِـَٔالِهَتِنَا
எங்கள் கடவுள்களுடன்
يَٰٓإِبْرَٰهِيمُ
இப்றாஹீமே

Qaalooo 'a-anta fa'alta haazaa bi aalihatinaa yaaa Ibraaheem

(அவ்வாறு இப்ராஹீமை கொண்டு வந்து அவரை நோக்கி) "இப்ராஹீமே! எங்களுடைய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீங்கள்தானோ?" என்று கேட்டனர்.

Tafseer

قَالَ
அவர்கள் கூறினர்
بَلْ
மாறாக
فَعَلَهُۥ
இதை செய்தது
كَبِيرُهُمْ
பெரிய சிலைதான் அவற்றில்
هَٰذَا
அவை
فَسْـَٔلُوهُمْ
ஆகவே கேளுங்கள் அவற்றிடம்
إِن كَانُوا۟
இருந்தால்
يَنطِقُونَ
பேசுபவர்களாக

Qaala bal fa'alahoo kabeeruhum haazaa fas'aloohum in kaanoo yantiqoon

அதற்கவர் "இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக் கூடியவையாக இருந்தால் அவைகளையே கேளுங்கள்" என்றார்.

Tafseer

فَرَجَعُوٓا۟
அவர்கள் திரும்பினர்
إِلَىٰٓ
பக்கமே
أَنفُسِهِمْ
தங்கள்
فَقَالُوٓا۟
கூறினர்
إِنَّكُمْ أَنتُمُ
நிச்சயமாக நீங்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Faraja'ooo ilaaa anfusihim faqaalooo innakum antumuz zaalimoon

அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) "நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று கூறிக்கொண்டார்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
نُكِسُوا۟
மாறினர்
عَلَىٰ رُءُوسِهِمْ
அவர்கள் தலைகீழாக
لَقَدْ
திட்டவட்டமாக
عَلِمْتَ
நீர் அறிவீர்
مَا هَٰٓؤُلَآءِ
இவை பேசாது என்பதை

Summa nukisoo 'alaa ru'oosihim laqad 'alimta maa haaa'ulaaa'i yantiqoon

பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்ராஹீமை நோக்கி) "இவை பேசாது என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றைக் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
أَفَتَعْبُدُونَ
வணங்குகிறீர்களா?
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
مَا لَا
எவற்றை/பலனளிக்காது/உங்களுக்கு/அறவே
وَلَا يَضُرُّكُمْ
இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது

Qaala afata'budoona min doonil laahi maa laa yanfa'ukum shai'anw wa laa yadurrukum

அதற்கவர் "உங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் வணங்குகிறீர்கள்.

Tafseer

أُفٍّ
சீச்சி
لَّكُمْ
உங்களுக்கு
وَلِمَا تَعْبُدُونَ
இன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்கு
مِن دُونِ
அன்றி
ٱللَّهِۖ
அல்லாஹ்வை
أَفَلَا تَعْقِلُونَ
நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?

Uffil lakum wa limaa ta'budoona min doonil laah; afalaa ta'qiloon

சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
حَرِّقُوهُ
அவரை எரித்து விடுங்கள்
وَٱنصُرُوٓا۟
இன்னும் உதவி செய்யுங்கள்
ءَالِهَتَكُمْ
உங்கள் கடவுள்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
فَٰعِلِينَ
(உதவி)செய்பவர்களாக

Qaaloo harriqooho wansurooo aalihatakum in kuntum faa'ileen

அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) "நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قُلْنَا
நாம் கூறினோம்
يَٰنَارُ
நெருப்பே
كُونِى
ஆகிவிடு
بَرْدًا
குளிர்ச்சியாகவும்
وَسَلَٰمًا
பாதுகாப்பாகவும்
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு

Qulnaa yaa naaru koonee bardanw wa salaaman 'alaaa Ibraaheem

(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) "நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!" என்று நாம் கூறினோம்.

Tafseer

وَأَرَادُوا۟ بِهِۦ
அவருக்கு நாடினர்
كَيْدًا
ஒரு சூழ்ச்சியை
فَجَعَلْنَٰهُمُ
அவர்களையே ஆக்கிவிட்டோம்
ٱلْأَخْسَرِينَ
நஷ்டவாளிகளாக

Wa araadoo bihee kaidan faja'alnaahumul akhsareen

அவர்கள் இப்ராஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.

Tafseer