Skip to main content

وَلِسُلَيْمَٰنَ
இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)
ٱلرِّيحَ
காற்றை
عَاصِفَةً
கடுமையாகவீசக்கூடிய
تَجْرِى
செல்லும்
بِأَمْرِهِۦٓ
அவருடைய கட்டளையின்படி
إِلَى ٱلْأَرْضِ
பூமியின் பக்கம்
ٱلَّتِى
எது
بَٰرَكْنَا
நாம் அருள்வளம் புரிந்தோம்
فِيهَاۚ
அதில்
وَكُنَّا
இன்னும் நாம் இருந்தோம்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَٰلِمِينَ
அறிந்தவர்களாக

Wa li Sulaimaanar reeha 'aasifatan tajree bi amriheee ilal ardil latee baaraknaa feehaa; wa kunnaa bikulli shai'in 'aalimeen

ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.

Tafseer

وَمِنَ ٱلشَّيَٰطِينِ
இன்னும் ஷைத்தான்களில்
مَن يَغُوصُونَ
எவர்/மூழ்கின்றார்கள்
لَهُۥ
அவருக்காக
وَيَعْمَلُونَ
இன்னும் செய்கின்றார்கள்
عَمَلًا
செயலை
دُونَ
அல்லாத
ذَٰلِكَۖ
அது
وَكُنَّا
நாம் இருந்தோம்
لَهُمْ
அவர்களை
حَٰفِظِينَ
பாதுகாப்பவர்களாக

Wa minash Shayaateeni mai yaghoosoona lahoo wa ya'maloona 'amalan doona zaalika wa kunna lahum baafizeen

கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவைகளைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத்தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்து கொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.

Tafseer

وَأَيُّوبَ
இன்னும் அய்யூபை நினைவு கூர்வீராக
إِذْ نَادَىٰ
அழைத்தபோது
رَبَّهُۥٓ
தன் இறைவனை
أَنِّى
நிச்சயமாக நான்
مَسَّنِىَ
என்னை தொட்டுவிட்டன
ٱلضُّرُّ
தீங்குகள்
وَأَنتَ
நீயோ
أَرْحَمُ
மகா கருணையாளன்
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்

Wa Ayyooba iz naadaa Rabbahooo annee massaniyad durru wa Anta arhamur raahimeen

அய்யூபையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கிவிடு.) நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மகா கிருபையாளன்" என்று பிரார்த்தனை செய்தார்.

Tafseer

فَٱسْتَجَبْنَا
ஆகவே, நாம் பதிலளித்தோம்
لَهُۥ
அவருக்கு
فَكَشَفْنَا
அகற்றினோம்
مَا بِهِۦ
அவருக்கு இருந்த
مِن ضُرٍّۖ
தீங்குகளை
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு வழங்கினோம்
أَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தை
وَمِثْلَهُم
அவர்கள் போன்றவர்களை
مَّعَهُمْ
அவர்களுடன்
رَحْمَةً
கருணையாக
مِّنْ عِندِنَا
நம் புறத்திலிருந்து
وَذِكْرَىٰ
இன்னும் நினைவூட்டலாகும்
لِلْعَٰبِدِينَ
வணக்கசாலிகளுக்கு

Fastajabnaa lahoo fakashaf naa maa bihee min durrinw wa aatainaahu ahlahoo wa mislahum ma'ahum rahmatam min 'indinaa wa zikraa lil'aabideen

ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் பின்னும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இஃது (எனக்குப் பயந்து) என்னை வணங்கு லிபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது.

Tafseer

وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக
وَإِدْرِيسَ
இத்ரீஸையும்
وَذَا ٱلْكِفْلِۖ
துல்கிஃப்லையும்
كُلٌّ
எல்லோரும்
مِّنَ ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களில் உள்ளவர்கள்

Wa Ismaa'eela wa Idreesa wa Zal Kifli kullum minas saabireen

இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லுவையும் (நாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம்.) இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டனர்.

Tafseer

وَأَدْخَلْنَٰهُمْ
இவர்களை நுழைத்துக் கொண்டோம்
فِى رَحْمَتِنَآۖ
நமது அருளில்
إِنَّهُم
நிச்சயமாக இவர்கள்
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் உள்ளவர்கள்

Wa adkhalnaahum fee rahmatinaa innahum minas saaliheen

ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம்முடைய அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லோர்களே.

Tafseer

وَذَا ٱلنُّونِ
மீனுடையவரை நினைவு கூர்வீராக
إِذ ذَّهَبَ
அவர் சென்றபோது
مُغَٰضِبًا
கோபித்தவராக
فَظَنَّ
எண்ணினார்
أَن لَّن
நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்
عَلَيْهِ
அவருக்கு
فَنَادَىٰ
அவர் அழைத்தார்
فِى ٱلظُّلُمَٰتِ
இருள்களில் இருந்தவராக
أَن لَّآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّآ
தவிர
أَنتَ
உன்னை
سُبْحَٰنَكَ
நீ மகா பரிசுத்தமானவன்
إِنِّى
நிச்சயமாக நான்
كُنتُ
சேர்ந்து விட்டேன்
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa Zan Nooni iz zahaba mughaadiban fazaanna al lan naqdira 'alaihi fanaanna al lan naqdira 'alaihi fanaadaa fiz zulumaati al laaa ilaaha illaaa Anta Subhaanaka innee kuntu minaz zaalimeen

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.

Tafseer

فَٱسْتَجَبْنَا
நாம் பதிலளித்தோம்
لَهُۥ
அவருக்கு
وَنَجَّيْنَٰهُ
அவரை நாம் பாதுகாத்தோம்
مِنَ ٱلْغَمِّۚ
துக்கத்திலிருந்து
وَكَذَٰلِكَ
இப்படித்தான்
نُۨجِى
நாம் பாதுகாப்போம்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை

Fastajabnaa lahoo wa najjainaahu minal ghamm; wa kazaalika nunjil mu'mineen

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) கஷ்டத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

Tafseer

وَزَكَرِيَّآ
இன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராக
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
رَبَّهُۥ
தன் இறைவனை
رَبِّ
என் இறைவா
لَا تَذَرْنِى
என்னை விட்டுவிடாதே
فَرْدًا
ஒருத்தனாக
وَأَنتَ
நீதான்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளில்

Wa Zakariyyaaa iz naadaa Rabbahoo Rabbi laa tazarnee fardanw wa Anta khairul waariseen

ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,

Tafseer

فَٱسْتَجَبْنَا
நாம் பதிலளித்தோம்
لَهُۥ
அவருக்கு
وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
لَهُۥ
அவருக்கு
يَحْيَىٰ
யஹ்யாவை
وَأَصْلَحْنَا
இன்னும் சீர்படுத்தினோம்
لَهُۥ
அவருக்கு
زَوْجَهُۥٓۚ
அவருடைய மனைவியை
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
يُسَٰرِعُونَ
விரைகின்றவர்களாக
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
وَيَدْعُونَنَا
இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக
رَغَبًا
ஆர்வத்துடனும்
وَرَهَبًاۖ
பயத்துடனும்
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
لَنَا
நம்மிடம்
خَٰشِعِينَ
பணிவுள்ளவர்களாக

Fastajabnaa lahoo wa wahabnaa lahoo Yahyaa Wa aslahnaa lahoo zawjah; innahum kaanoo yusaari'oona fil khairaati wa yad'oonanaa raghabanw wa rahabaa; wa kaanoo lanaa khaashi'een

நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

Tafseer