Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭

وَاَوْحَيْنَآ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَلْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِيْ وَلَا تَحْزَنِيْ ۚاِنَّا رَاۤدُّوْهُ اِلَيْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ   ( القصص: ٧ )

And We inspired
وَأَوْحَيْنَآ
நாம் உள்ளத்தில் போட்டோம்
[to] (the) mother
إِلَىٰٓ أُمِّ
தாயாருக்கு
(of) Musa
مُوسَىٰٓ
மூஸாவின்
that "Suckle him
أَنْ أَرْضِعِيهِۖ
நீ அவருக்கு பாலூட்டு!
but when you fear
فَإِذَا خِفْتِ
நீ பயந்தால்
for him
عَلَيْهِ
அவரை
then cast him
فَأَلْقِيهِ
அவரை எரிந்து விடு
in(to) the river
فِى ٱلْيَمِّ
கடலில்
and (do) not fear
وَلَا تَخَافِى
நீ பயப்படாதே!
and (do) not grieve
وَلَا تَحْزَنِىٓۖ
இன்னும் நீ கவலைப்படாதே!
Indeed We
إِنَّا
நிச்சயமாக நாம்
(will) restore him
رَآدُّوهُ
அவரை திரும்பக் கொண்டு வருவோம்
to you
إِلَيْكِ
உம்மிடம்
and (will) make him
وَجَاعِلُوهُ
இன்னும் , அவரை ஆக்குவோம்
of the Messengers"
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்

Wa awhainaaa ilaaa ummi Moosaaa an ardi'eehi faizaa khifti 'alaihi fa alqeehi filyammi wa laa takhaafee wa laa tahzaneee innaa raaaddoohu ilaiki wa jaa'iloohu minal mursaleen (al-Q̈aṣaṣ 28:7)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.)

English Sahih:

And We inspired to the mother of Moses, "Suckle him; but when you fear for him, cast him into the river and do not fear and do not grieve. Indeed, We will return him to you and will make him [one] of the messengers." ([28] Al-Qasas : 7)

1 Jan Trust Foundation

நாம் மூஸாவின் தாயாருக்கு| “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.