Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௦

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۗ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ   ( آل عمران: ١١٠ )

You are
كُنتُمْ
இருக்கிறீர்கள்
(the) best
خَيْرَ
சிறந்த(வர்கள்)
(of) people
أُمَّةٍ
சமுதாயம்
raised
أُخْرِجَتْ
வெளியாக்கப்பட்டது
for the mankind -
لِلنَّاسِ
மக்களுக்காக
enjoining
تَأْمُرُونَ
ஏவுகிறீர்கள்
the right
بِٱلْمَعْرُوفِ
நன்மையைக்கொண்டு
and forbidding
وَتَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறீர்கள்
[from] the wrong
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
and believing
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
in Allah
بِٱللَّهِۗ
அல்லாஹ்வை
And if believed
وَلَوْ ءَامَنَ
நம்பிக்கைகொண்டால்
(the) People (of) the Book
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
surely would have been
لَكَانَ
உறுதி ஆகிவிட்டது
good
خَيْرًا
சிறந்ததாக
for them
لَّهُمۚ
அவர்களுக்கு
Among them
مِّنْهُمُ
அவர்களில்
(are) the believers
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
but most of them (are) defiantly disobedient
وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்/பாவிகள்

Kuntum khaira ummatin ukhrijat linnaasi taamuroona bilma'roofi wa tanhawna 'anil munkari wa tu'minoona billaah; wa law aamana Ahlul Kitaabi lakaana khairal lahum minhumul mu'minoona wa aksaruhumul faasiqoon (ʾĀl ʿImrān 3:110)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

English Sahih:

You are the best nation produced [as an example] for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allah. If only the People of the Scripture had believed, it would have been better for them. Among them are believers, but most of them are defiantly disobedient. ([3] Ali 'Imran : 110)

1 Jan Trust Foundation

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.