Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௩௦

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۗ فِطْرَتَ اللّٰهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَاۗ لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللّٰهِ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُۙ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ   ( الروم: ٣٠ )

So set
فَأَقِمْ
ஆகவே நிறுத்துவீராக!
your face
وَجْهَكَ
உம் முகத்தை
to the religion
لِلدِّينِ
மார்க்கத்தின் பக்கம்
upright
حَنِيفًاۚ
உறுதியுடையவராக
Nature
فِطْرَتَ
இயற்கை மார்க்கம்
(made by) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
(upon) which He has created
ٱلَّتِى فَطَرَ
எது/இயற்கையாக அமைத்தான்
mankind
ٱلنَّاسَ
மக்களை
[on it]
عَلَيْهَاۚ
அதன் மீதுதான்
No change
لَا تَبْدِيلَ
மாற்றக்கூடாது
(should there be) in the creation
لِخَلْقِ
படைப்பை
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
That
ذَٰلِكَ
இதுதான்
(is) the religion
ٱلدِّينُ
மார்க்கம்
the correct
ٱلْقَيِّمُ
நிலையான
but
وَلَٰكِنَّ
என்றாலும்
most
أَكْثَرَ
அதிகமானவர்கள்
men
ٱلنَّاسِ
மக்களில்
(do) not know
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Fa aqim wajhaka liddeeni Haneefaa; fitratal laahil latee fataran naasa 'alaihaa; laa taabdeela likhalqil laah; zaalikad deenul qaiyimu wa laakinna aksaran naasi laa ya'lamoon (ar-Rūm 30:30)

Abdul Hameed Baqavi:

(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்.

English Sahih:

So direct your face [i.e., self] toward the religion, inclining to truth. [Adhere to] the fitrah of Allah upon which He has created [all] people. No change should there be in the creation of Allah. That is the correct religion, but most of the people do not know. ([30] Ar-Rum : 30)

1 Jan Trust Foundation

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.