Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩

اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ ۗوَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَآ اِلَى اللّٰهِ زُلْفٰىۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِيْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ەۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ  ( الزمر: ٣ )

Unquestionably
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
for Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
(is) the religion
ٱلدِّينُ
வழிபாடுகள்
the pure
ٱلْخَالِصُۚ
பரிசுத்தமான(து)
And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
take
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டார்கள்
besides Him besides Him
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
protectors
أَوْلِيَآءَ
தெய்வங்களை
"Not
مَا
நாங்கள்வணங்குவதில்லை
we worship them
نَعْبُدُهُمْ
நாங்கள்வணங்குவதில்லை அவர்களை
except
إِلَّا
தவிர
that they may bring us near
لِيُقَرِّبُونَآ
அவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காக
to Allah
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
(in) position"
زُلْفَىٰٓ
அந்தஸ்தால்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
will judge
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
between them
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
in what they [in it]
فِى مَا هُمْ فِيهِ
அவர்கள் தர்க்கிப்பவற்றில்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(does) not guide
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
(one) who
مَنْ
எவர்
[he]
هُوَ
அவர்
(is) a liar
كَٰذِبٌ
பொய்யர்களை
and a disbeliever
كَفَّارٌ
நிராகரிப்பாளர்களை

Alaa lillaahid deenul khaalis; wallazeenat takhazoo min dooniheee awliyaaa'a maa na'buduhum illaa liyuqar riboonaaa ilal laahi zulfaa; innal laaha yahkumu baina hum fee maa hum feehi yakhtalifoon; innal laaha laa yahdee man huwa kaazibun kaffaar (az-Zumar 39:3)

Abdul Hameed Baqavi:

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை, தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை" (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.

English Sahih:

Unquestionably, for Allah is the pure religion. And those who take protectors besides Him [say], "We only worship them that they may bring us nearer to Allah in position." Indeed, Allah will judge between them concerning that over which they differ. Indeed, Allah does not guide he who is a liar and [confirmed] disbeliever. ([39] Az-Zumar : 3)

1 Jan Trust Foundation

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.