Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௪

فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِۗ حَتّٰٓى اِذَآ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَۖ فَاِمَّا مَنًّاۢ بَعْدُ وَاِمَّا فِدَاۤءً حَتّٰى تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ەۛ ذٰلِكَ ۛ وَلَوْ يَشَاۤءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلٰكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍۗ وَالَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ   ( محمد: ٤ )

So when you meet
فَإِذَا لَقِيتُمُ
நீங்கள் சந்தித்தால்
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
then strike
فَضَرْبَ
வெட்டுங்கள்!
the necks
ٱلرِّقَابِ
பிடரிகளை
until
حَتَّىٰٓ
இறுதியாக
when you have subdued them
إِذَآ أَثْخَنتُمُوهُمْ
அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்
then bind firmly
فَشُدُّوا۟
உறுதியாகக் கட்டுங்கள்!
the bond
ٱلْوَثَاقَ
கயிறுகளில்
then either
فَإِمَّا
ஒன்று
a favor
مَنًّۢا
உபகாரம் புரியுங்கள்!
afterwards
بَعْدُ
அதற்குப் பின்னர்
or
وَإِمَّا
அல்லது
ransom
فِدَآءً
பிணைத்தொகை கொடுக்கட்டும்!
until
حَتَّىٰ
இறுதியாக
lays down
تَضَعَ
முடிக்கின்ற (வரை)
the war
ٱلْحَرْبُ
போர்
its burdens
أَوْزَارَهَاۚ
அதன் சுமைகளை
That
ذَٰلِكَ
இதுதான்
And if Allah had willed Allah had willed
وَلَوْ يَشَآءُ ٱللَّهُ
அல்லாஹ் நாடினால்
surely, He could have taken retribution
لَٱنتَصَرَ
பழிதீர்த்திருப்பான்
from them
مِنْهُمْ
அவர்களிடம்
but
وَلَٰكِن
என்றாலும்
to test
لِّيَبْلُوَا۟
அவன்சோதிப்பதற்காக
some of you
بَعْضَكُم
உங்களில் சிலரை
with others
بِبَعْضٍۗ
சிலர் மூலமாக
And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
are killed
قُتِلُوا۟
கொல்லப்பட்டார்களோ
in (the) way of Allah
فِى سَبِيلِ
பாதையில்
(the) way of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
then never He will cause to be lost
فَلَن يُضِلَّ
வீணாக்கிவிட மாட்டான்
their deeds
أَعْمَٰلَهُمْ
அவர்களின் அமல்களை

Fa-izaa laqeetumul lazeena kafaroo fadarbar riqaab, hattaaa izaa askhan tumoohum fashuddul wasaaq, fa immaa mannnam ba'du wa immaa fidaaa'an hattaa tada'al harbu awzaarahaa; zaalika wa law yashaaa'ul laahu lantasara minhum wa laakil laiyabluwa ba'dakum biba'd; wallazeena qutiloo fee sabeelil laahi falany yudilla a'maalahum (Muḥammad 47:4)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக வேனும் விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.)

English Sahih:

So when you meet those who disbelieve [in battle], strike [their] necks until, when you have inflicted slaughter upon them, then secure [their] bonds, and either [confer] favor afterwards or ransom [them] until the war lays down its burdens. That [is the command]. And if Allah had willed, He could have taken vengeance upon them [Himself], but [He ordered armed struggle] to test some of you by means of others. And those who are killed in the cause of Allah – never will He waste their deeds. ([47] Muhammad : 4)

1 Jan Trust Foundation

(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.