Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௦

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢبِيَاۤءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًاۙ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ  ( المائدة: ٢٠ )

And when said
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை...
Musa
مُوسَىٰ
மூஸா
to his people
لِقَوْمِهِۦ
தன் சமுதாயத்திற்கு
"O my people
يَٰقَوْمِ
என் சமுதாயமே
remember
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
(the) Favor
نِعْمَةَ
அருளை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
when He placed
إِذْ جَعَلَ
அந்நேரத்தில்/ ஆக்கினான்
among you
فِيكُمْ
உங்களில்
Prophets
أَنۢبِيَآءَ
நபிமார்களை
and made you
وَجَعَلَكُم
ஆக்கினான்/உங்களை
kings
مُّلُوكًا
அரசர்களாக
and He gave you
وَءَاتَىٰكُم
இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு
what
مَّا
எவற்றை
not He (had) given
لَمْ يُؤْتِ
கொடுக்கவில்லை
(to) anyone
أَحَدًا
ஒருவருக்கும்
from the worlds
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்

Qa iz qaala Moosaa liqawmihee yaa qawmiz kuroo ni'matal laahi 'alaikum iz ja'ala feekum mulookanw wa aataakum maa lam yu'ti ahadam minal 'aalameen (al-Māʾidah 5:20)

Abdul Hameed Baqavi:

அன்றி, மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், "மன்னுஸல்வா" என்ற உணவு போன்ற)வைகளையும் உங்களுக்கு அளித்திருக்கின்றான்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.

English Sahih:

And [mention, O Muhammad], when Moses said to his people, "O my people, remember the favor of Allah upon you when He appointed among you prophets and made you possessors and gave you that which He had not given anyone among the worlds. ([5] Al-Ma'idah : 20)

1 Jan Trust Foundation

அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.