Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௬

وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا ۢ بِسِيْمٰىهُمْۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْۗ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ   ( الأعراف: ٤٦ )

And between them
وَبَيْنَهُمَا
அவ்விருவருக்குமிடையில்
(will be) a partition
حِجَابٌۚ
ஒரு மதில்
and on
وَعَلَى
மீது
the heights
ٱلْأَعْرَافِ
சிகரங்கள்
(will be) men
رِجَالٌ
(சில) மனிதர்கள்
recognizing
يَعْرِفُونَ
அறிவார்கள்
all
كُلًّۢا
ஒவ்வொருவரையும்
by their marks
بِسِيمَىٰهُمْۚ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
And they will call out
وَنَادَوْا۟
இன்னும் அழைப்பார்கள்
(to the) companions (of) Paradise
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகளை
that "Peace
أَن سَلَٰمٌ
என்று/ஈடேற்றம்
(be) upon you"
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
Not they have entered it
لَمْ يَدْخُلُوهَا
அவர்கள் நுழையவில்லை/அதில்
but they hope
وَهُمْ يَطْمَعُونَ
அவர்கள் ஆசைப்படுவார்கள்

Wa bainahumaa hijaab; wa 'alal A'raafi rijaaluny ya'rifoona kullam biseemaahum; wa naadaw Ashaabal jannati an salaamun 'alaikum; lam yadkhuloohaa wa hum yatma'oon (al-ʾAʿrāf 7:46)

Abdul Hameed Baqavi:

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

English Sahih:

And between them will be a partition [i.e., wall], and on [its] elevations are men who recognize all by their mark. And they call out to the companions of Paradise, "Peace be upon you." They have not [yet] entered it, but they long intensely. ([7] Al-A'raf : 46)

1 Jan Trust Foundation

(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.