Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௮

لَقَدْ جَاۤءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ   ( التوبة: ١٢٨ )

Certainly
لَقَدْ
வந்து விட்டார்
(has) come to you
جَآءَكُمْ
உங்களிடம்
a Messenger
رَسُولٌ
ஒரு தூதர்
from yourselves
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
Grievous
عَزِيزٌ
கடினமானது
to him
عَلَيْهِ
அவர் மீது
(is) what you suffer
مَا عَنِتُّمْ
நீங்கள் சிரமப்படுவது
(he is) concerned
حَرِيصٌ
பேராசையுடையவர்
over you
عَلَيْكُم
உங்கள் மீது
to the believers
بِٱلْمُؤْمِنِينَ
மீது/ நம்பிக்கையாளர்கள்
(he is) kind
رَءُوفٌ
பெரும் இரக்கமுள்ளவர்
(and) merciful
رَّحِيمٌ
பெரும் கருணையுள்ளவர்

Laqad jaaa'akum Rasoolum min anfusikum 'azeezun 'alaihi maa 'anittum hareesun 'alaikum bilmu'mineena ra'oofur raheem (at-Tawbah 9:128)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.

English Sahih:

There has certainly come to you a Messenger from among yourselves. Grievous to him is what you suffer; [he is] concerned over you [i.e., your guidance] and to the believers is kind and merciful. ([9] At-Tawbah : 128)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.