Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௪௨

وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا ۗيَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍۗ وَسَيَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ   ( الرعد: ٤٢ )

And certainly
وَقَدْ
திட்டமாக
plotted
مَكَرَ
சூழ்ச்சி செய்தனர்
those who (were) from before them
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
but for Allah
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
(is) the plot
ٱلْمَكْرُ
சூழ்ச்சி
all
جَمِيعًاۖ
அனைத்தும்
He knows
يَعْلَمُ
அறிவான்
what earns
مَا تَكْسِبُ
எதை/செய்கிறது
every
كُلُّ
ஒவ்வொரு
soul
نَفْسٍۗ
ஆன்மா
and will know
وَسَيَعْلَمُ
அறிவார்(கள்)
the disbelievers
ٱلْكُفَّٰرُ
நிராகரிப்பவர்கள்
for whom
لِمَنْ
எவருக்கு
(is) the final
عُقْبَى
முடிவு
the home
ٱلدَّارِ
மறுமை

Wa qad makaral lazeena min qablihim falillaahil makru jamee'aa; ya'lamu maa taksibu kullu nafs; wa sa ya'lamul kuffaaru liman 'uqbad daar (ar-Raʿd 13:42)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ் விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வொரு ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகின்றான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

English Sahih:

And those before them had plotted, but to Allah belongs the plan entirely. He knows what every soul earns, and the disbelievers will know for whom is the final home. ([13] Ar-Ra'd : 42)

1 Jan Trust Foundation

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.