Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௧

۞ يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ   ( النحل: ١١١ )

(On) the Day
يَوْمَ
நாளில்
(when) will come
تَأْتِى
வரும்
every
كُلُّ
ஒவ்வொரு
soul
نَفْسٍ
ஆன்மா
pleading
تُجَٰدِلُ
தர்க்கித்ததாக
for itself
عَن نَّفْسِهَا
தன்னைப் பற்றி
and will be paid in full
وَتُوَفَّىٰ
இன்னும் முழு கூலி கொடுக்கப்படும்
every soul
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு/ஆன்மா
what it did
مَّا عَمِلَتْ
எதற்கு/செய்தது
and they (will) not be wronged
وَهُمْ لَا يُظْلَمُونَ
இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்

Yawma taatee kullu nafsin tujaadilu 'an nafsihaa wa tuwaffaa kullu nafsim maa 'amilat wa hum laa yuzlamoon (an-Naḥl 16:111)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வரும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதனைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

English Sahih:

On the Day when every soul will come disputing [i.e., pleading] for itself, and every soul will be fully compensated for what it did, and they will not be wronged [i.e., treated unjustly]. ([16] An-Nahl : 111)

1 Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.