Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௫௧

اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِيْ صُدُوْرِكُمْ ۚفَسَيَقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَاۗ قُلِ الَّذِيْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍۗ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَۗ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا  ( الإسراء: ٥١ )

Or
أَوْ
அல்லது
a creation
خَلْقًا
ஒரு படைப்பாக
of what
مِّمَّا
உள்ளவற்றில்
(is) great
يَكْبُرُ
பெரியதாக
in your breasts"
فِى صُدُورِكُمْۚ
உங்கள் நெஞ்சங்களில்
Then they will say
فَسَيَقُولُونَ
அவர்கள் கூறட்டும்
"Who
مَن
யார்?
will restore us?"
يُعِيدُنَاۖ
மீட்பார்/எங்களை
Say
قُلِ
கூறுவீராக
"He Who
ٱلَّذِى
எவன்
created you
فَطَرَكُمْ
படைத்தான்/உங்களை
(the) first
أَوَّلَ
முதல்
time"
مَرَّةٍۚ
முறையாக
Then they will shake
فَسَيُنْغِضُونَ
ஆகவே ஆட்டுவார்கள்
at you
إِلَيْكَ
உம் பக்கம்
their heads
رُءُوسَهُمْ
தலைகளை/தங்கள்
and they say
وَيَقُولُونَ
பிறகு கூறுவார்கள்
"When (will)
مَتَىٰ
எப்போது
it (be)?"
هُوَۖ
அது
Say
قُلْ
கூறுவீராக
"Perhaps
عَسَىٰٓ
கூடும்
that (it) will be
أَن يَكُونَ
இருக்க
soon"
قَرِيبًا
சமீபமாக

aw khalqam mimmaa yakburu fee sudoorikum; fasa yaqooloona mai yu'eedunaa qulil lazee fatarakum awwala marrah; fasa yunghidoona ilaika ru'oosahum wa yaqooloona mataa huwa qul 'asaaa any yakoona qareeba (al-ʾIsrāʾ 17:51)

Abdul Hameed Baqavi:

அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள்.

English Sahih:

Or [any] creation of that which is great within your breasts." And they will say, "Who will restore us?" Say, "He who brought you forth the first time." Then they will nod their heads toward you and say, "When is that?" Say, "Perhaps it will be soon – ([17] Al-Isra : 51)

1 Jan Trust Foundation

“அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!