Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௫௪

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْٓا اِلٰى بَارِىِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْۗ فَتَابَ عَلَيْكُمْ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ   ( البقرة: ٥٤ )

And when said
وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
Musa
مُوسَىٰ
மூசா
to his people
لِقَوْمِهِۦ
சமுதாயத்திற்கு/தன்
"O my people!
يَٰقَوْمِ
என் சமுதாயமே
Indeed you
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
[you] have wronged
ظَلَمْتُمْ
அநியாயம்செய்தீர்கள்
yourselves
أَنفُسَكُم
ஆன்மாக்களுக்கு/உங்கள்
by your taking
بِٱتِّخَاذِكُمُ
நீங்கள் எடுத்துக் கொண்டதினால்
the calf
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
So turn in repentance
فَتُوبُوٓا۟
எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள்
to
إِلَىٰ
பக்கம்
your Creator
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
and kill
فَٱقْتُلُوٓا۟
ஆகவேகொல்லுங்கள்
yourselves
أَنفُسَكُمْ
உயிர்களை/உங்கள்
That
ذَٰلِكُمْ
அது
(is) better
خَيْرٌ
சிறந்தது
for you
لَّكُمْ
உங்களுக்கு
with
عِندَ
இடம்
your Creator"
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
Then He turned
فَتَابَ
எனவே மன்னித்தான்
towards you
عَلَيْكُمْۚ
உங்களை
Indeed He! He
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
(is) the Oft-returning
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
the Most Merciful
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Wa iz qaala Moosaa liqawmihee yaa qawmi innakum zalamtum anfusakum bittikhaa zikumul 'ijla fatoobooo ilaa Baari'ikum faqtulooo anfusakum zaalikum khairul lakum 'inda Baari'ikum fataaba 'alaikum; innahoo Huwat Tawwaabur Raheem (al-Baq̈arah 2:54)

Abdul Hameed Baqavi:

பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.

English Sahih:

And [recall] when Moses said to his people, "O my people, indeed you have wronged yourselves by your taking of the calf [for worship]. So repent to your Creator and kill yourselves [i.e., the guilty among you]. That is best for [all of] you in the sight of your Creator." Then He accepted your repentance; indeed, He is the Accepting of Repentance, the Merciful. ([2] Al-Baqarah : 54)

1 Jan Trust Foundation

மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.