Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௯

هٰٓاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّاۖ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ ۗ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ  ( آل عمران: ١١٩ )

Lo! You are
هَٰٓأَنتُمْ
நீங்கள்
those
أُو۟لَآءِ
எப்படிப்பட்டவர்கள்
you love them
تُحِبُّونَهُمْ
நேசிக்கிறீர்கள்/ இவர்களை
but not they love you
وَلَا يُحِبُّونَكُمْ
அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
and you believe
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
in the Book -
بِٱلْكِتَٰبِ
வேதத்தை
all of it
كُلِّهِۦ
அவை எல்லாம்
And when
وَإِذَا
இன்னும் அவர்கள் சந்தித்தால்
they meet you
لَقُوكُمْ
இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
they say
قَالُوٓا۟
கூறுகின்றனர்
"We believe"
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
And when they are alone
وَإِذَا خَلَوْا۟
இன்னும் அவர்கள் தனித்தால்
they bite
عَضُّوا۟
கடித்தனர்
at you
عَلَيْكُمُ
உங்கள் மீது
the finger tips
ٱلْأَنَامِلَ
விரல் நுனிகளை
(out) of [the] rage
مِنَ ٱلْغَيْظِۚ
கோபத்தினால்
Say
قُلْ
கூறுவீராக
Die
مُوتُوا۟
சாவுங்கள்
in your rage
بِغَيْظِكُمْۗ
உங்கள்கோபத்தினால்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) All-Knowing
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
of what
بِذَاتِ
உள்ளவற்றை
(is in) the breasts"
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்

Haaa antum ulaaa'i tuhibboonahum wa laa yuhibboonakum wa tu'minoona bil kitaabi kullihee wa izaa laqookum qaalooo aamannaa wa izaa khalaw 'addoo 'alaikumul anaamila minal ghaiz; qul mootoo bighai zikum; innal laaha 'aleemum bizaatis sudoor (ʾĀl ʿImrān 3:119)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."

English Sahih:

Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture – all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allah is Knowing of that within the breasts." ([3] Ali 'Imran : 119)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது| “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.